அறம் வந்தும் கரம் கொடுக்கா சுர்ஜித்தின் துயர்.
அறம் என்று அன்று படம் ஒன்று வந்தது. இன்று அதே நிலையில் நியம் இங்கு நிகழ்ந்தது. இரண்டு வயது குழந்தைக்கு இயற்கை செய்த கொடுமையா? இல்லை இந்த அரசாங்கம் காட்டிய அலட்சியமா?

இரண்டே வயதாகும் சுர்ஜித் என்ற குழந்தை, இந்தியாவில் திருச்சியில் நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் 25.10.2019 வெள்ளிக்கிழமை ஓடிவிளையாடும் போது ஏற்பட்ட ஓர் உச்சக்கட்ட அபாயம் தான் இது. தந்தை செய்த தவறில் மாட்டிக்கொண்ட தனையன் என்பது சுர்ஜித் விடையத்தில் உண்மையாகின்றது.

மூன்று நாட்களாக(27.10.2019 இன்று மதியம் 2 மணி வரை) அந்தக் குழந்தை 25 அடியில் இருந்து சிறிது சிறிதாக நழுவி உள்ளே இறங்கி கொண்டு உள்ளது. இப்போது வரை அனைத்து வழிகளையும் முயற்சித்துப் போராடிக் கொண்டு இருக்கும் தீயணைப்புப் படை, மற்றும் ஒட்டு மொத்த இந்தியாவும் நம்பிக்கை மற்றும் பிராத்தனையைக் கைவிடவில்லை. நீங்களும் உங்கள் ஒரு பிராத்தனையை அந்தக் குழந்தைக்கு கொடுங்கள். இனிமேல் எந்த ஒரு சுர்ஜித்திற்கும் இந்த ஒரு நிலை ஏற்படக் கூடாது. அதற்காய்ப் பிராதியுங்கள். ஆனால் நடந்தது என்ன?

மழை பொய்த்து போன மண்ணில், விவசாயித் தந்தை போட்ட துளைதான் அந்த ஆழ்துளைக் கிணறு. துளை போட்டும் நீரில்லாக் காரணத்தால் அதை மூடுவதற்கு இன்னும் ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டுமா? என்று எண்ணிய தந்தை கல்லையும் மண்ணையும் போட்டு கவனயீனமாக மூடியது முதல்க் குற்றம். கிணறு சரியாக மூடப்பட்டதா? என்று கவனிக்காத அரசாங்க அதிகாரிகள் இரண்டாம் குற்றவாளிகள். விழுந்த குழந்தையைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருந்த மத்திய அரசாங்கம் மூன்றாம் குற்றவாளி. ஆனால் இப்போது அந்தத் துளையில் இருந்து 3 மீட்டரை அருகில் இன்னுமோர் துளை போடப்படுகின்றது அதன் வழியாக உள்ளே சென்று 4 இஞ்சித் துளையில் சிக்கி வெளியில் வரமுடியாமல் அலறும் குழந்தைக்கு அருகாமையில் துளையிட்டுச் சென்று காப்பாற்ற முயலும் குழுவிற்கு எங்கள் பிரார்த்தனையையும் கொடுத்து காப்பாற்ற வழிபடுவோம். இந்தத் தகவலை உடனடியாக அனைவரோடும் பகிர்ந்து நம்பிக்கையை அதிகரிப்போம். நாளை இன்னோர் குழந்தை இன்னலில் அவதிப்படக் கூடாது என்றால், பேசுங்கள் தயவு செய்து இந்தத் தகவலைப் பகிர்ந்து, பலரோடு பேசுங்கள். பேசி நன்மையை எதிர்பார்ப்போம்.
தகவல்,
ஈழன்.