Month: October 2019

அறம் வந்தும் கரம் கொடுக்கா சுர்ஜித்தின் துயர்.

அறம் என்று அன்று படம் ஒன்று வந்தது. இன்று அதே நிலையில் நியம் இங்கு நிகழ்ந்தது. இரண்டு வயது குழந்தைக்கு இயற்கை செய்த கொடுமையா? இல்லை இந்த அரசாங்கம் காட்டிய அலட்சியமா?

இரண்டே வயதாகும் சுர்ஜித் என்ற குழந்தை, இந்தியாவில் திருச்சியில் நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் 25.10.2019 வெள்ளிக்கிழமை ஓடிவிளையாடும் போது ஏற்பட்ட ஓர் உச்சக்கட்ட அபாயம் தான் இது. தந்தை செய்த தவறில் மாட்டிக்கொண்ட தனையன் என்பது சுர்ஜித் விடையத்தில் உண்மையாகின்றது.

மூன்று நாட்களாக(27.10.2019 இன்று மதியம் 2 மணி வரை) அந்தக் குழந்தை 25 அடியில் இருந்து சிறிது சிறிதாக நழுவி உள்ளே இறங்கி கொண்டு உள்ளது. இப்போது வரை அனைத்து வழிகளையும் முயற்சித்துப் போராடிக் கொண்டு இருக்கும் தீயணைப்புப் படை, மற்றும் ஒட்டு மொத்த இந்தியாவும் நம்பிக்கை மற்றும் பிராத்தனையைக் கைவிடவில்லை. நீங்களும் உங்கள் ஒரு பிராத்தனையை அந்தக் குழந்தைக்கு கொடுங்கள். இனிமேல் எந்த ஒரு சுர்ஜித்திற்கும் இந்த ஒரு நிலை ஏற்படக் கூடாது. அதற்காய்ப் பிராதியுங்கள். ஆனால் நடந்தது என்ன?

மழை பொய்த்து போன மண்ணில், விவசாயித் தந்தை போட்ட துளைதான் அந்த ஆழ்துளைக் கிணறு. துளை போட்டும் நீரில்லாக் காரணத்தால் அதை மூடுவதற்கு இன்னும் ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டுமா? என்று எண்ணிய தந்தை கல்லையும் மண்ணையும் போட்டு கவனயீனமாக மூடியது முதல்க் குற்றம். கிணறு சரியாக மூடப்பட்டதா? என்று கவனிக்காத அரசாங்க அதிகாரிகள் இரண்டாம் குற்றவாளிகள். விழுந்த குழந்தையைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருந்த மத்திய அரசாங்கம் மூன்றாம் குற்றவாளி. ஆனால் இப்போது அந்தத் துளையில் இருந்து 3 மீட்டரை அருகில் இன்னுமோர் துளை போடப்படுகின்றது அதன் வழியாக உள்ளே சென்று 4 இஞ்சித் துளையில் சிக்கி வெளியில் வரமுடியாமல் அலறும் குழந்தைக்கு அருகாமையில் துளையிட்டுச் சென்று காப்பாற்ற முயலும் குழுவிற்கு எங்கள் பிரார்த்தனையையும் கொடுத்து காப்பாற்ற வழிபடுவோம். இந்தத் தகவலை உடனடியாக அனைவரோடும் பகிர்ந்து நம்பிக்கையை அதிகரிப்போம். நாளை இன்னோர் குழந்தை இன்னலில் அவதிப்படக் கூடாது என்றால், பேசுங்கள் தயவு செய்து இந்தத் தகவலைப் பகிர்ந்து, பலரோடு பேசுங்கள். பேசி நன்மையை எதிர்பார்ப்போம்.

தகவல்,
ஈழன்.

விஜயின் பிகிலில் உள்ள 5 சிறப்பம்சங்கள், ஓர் விமர்சனம்

இளைய தளபதி விஜய் அவர்கள் இப்போது நடித்து தீபாவளிக்கு வெளிவருகின்ற பிகில் திரைப்படத்தில் ஒழிந்திருக்கும் அந்த ஐந்து விசேடமான காட்சிகள் இதோ உங்களுக்காக இந்த வீடியோவில்

Click on the Photo for watch Bigil Movie Special

Click on the Photo for watch Bigil Movie Special

விண்வெளியில் ஒரு சின்ன மின்மினி.

விண்வெளி என்பது, அன்னையின் மடியில் படுத்து அம்புலி பார்த்த காலம் முதல் அனைவரின் மனதிலும் ஒரு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும் இன்பமான இடம் தான் இந்த விண்வெளி. ஆனால் இந்த விண்வெளியில் ஒரு ஆச்சரியமான புதுமை ஒன்று ஏற்படவுள்ளது, என்று சொன்னாலே நம்புவீர்களா? மனிதன் 1600 ஆம் ஆண்டுகளில் விண்ணைப் பார்த்தான், விண்ணில் மின்னும் பொருட்கள், மின்னாப் பொருட்கள் இருப்பதைக் கண்டான், ஆராய்ந்தான். மின்னும் பொருட்கள் நட்சத்திரம், மின்னாப் பொருட்கள் கோள்கள் என்று கண்டறிந்தான்.

2000 ஆண்டுகளில் நான் விண்ணைப் பார்த்தேன் மின்னும் பொருட்கள் மின்னாப் பொருட்கள் கண்டேன். மின்னாப் பொருட்கள் கோள்கள், மின்னும் பொருட்கள் நட்சத்திரம் அல்லது செய்மதி என்று கற்றுக் கொண்டேன். ஆனால் 3000 ஆண்டுகளில் வானில் இன்னுமொரு பொருள் மிகையாக அதிகரிக்கவுள்ளது. அதாவது 3000க்குப் பின் உள்ள குழந்தைகள் விண்ணைப் பார்க்கும் போது விண்ணில் மின்னும் பொருட்கள், மின்னாப் பொருட்கள் இருக்கும். அவை எவை என்று ஆராய்ந்தால் மின்னும் பொருட்கள் நட்சத்திரமும், செய்மதியும். மின்னாப் பொருட்கள் கோள்களும் குவள் உலகமும் ஆகும். அது என்ன குவள் உலகம்? இதோ ஒரு புதிய பயணத்திற்குத் தயாராகுங்கள்.

மனிதன் அறிவில் விருத்தி கண்டு வருகின்றான். அதே நேரம் உயிர்வாழும் காலத்தையும் அதிகரித்து வருகின்றான். இவை இரண்டும் இயற்கைக்கு சற்று முரண்பாடாகும் வேளையில், இயற்கை சமநிலையைத் தேடி, இயற்கை அனர்த்தங்களை உண்டுபண்ணி மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றது. இதை எதிர்வுகொள்ளவே மனிதன் வேறு கிரகங்களிற்குச் சென்று வாழலாமா என்று சிந்தித்து செயல்பட்டும் வருகின்றான். ஆனால் ஒவ்வொரு கோள்களிலும் ஒவ்வொரு குறைபாடுள்ளது. பூமியில் வாழ்ந்து பழகிய மனிதனிற்கு பிற கோள்கள் குறையாக உள்ளது. இதை நிவர்த்தி செய்ய ஒரு புதிய முயற்சி செய்யவுள்ளான். எப்படித் தெரியுமா?


வளமான மண்ணில்லா நாடுகள் கடலில் கப்பல் விட்டு அதிலே வளமான மண்ணை பிற நாட்டில் இருந்து பெற்று விவசாயம் செய்து வருவது எத்தனை பெருக்குத் தெரியும்? பாலை வன நாடுகள், அணு குண்டு துளைத்த ஆசிய நாடு என்று பல நாடுகள் இந்த கடல் மேல் விவசாயம் செய்துவருகின்றது. இதேபோலத் தான் பூமி போன்றே உருளை வடிவில் பெரிய குவளை செய்து அதை சிறிது சிறிதாக பகுதி பகுதியாக விண்ணுக்கு அனுப்பி விண்ணில் ஒரு குவளை உலகை உருவாக்கி, அதை குவள் வீடு (Galaxy Orb House) என்று அழைப்பார்கள். உலகில் நாம் உலகிற்கு வெளியில் நடப்பது போல, அந்த குவள் உலகில் உலகிற்கு உள்ளே நாங்கள், மரம் வளர்த்து வீடு கட்டி வாழ்வோம்.  அதிலே பண முதலைகள் தங்கள் பரம்பரையை பரப்பவுள்ளது. இதைக் கேட்கும் போது, பார்த்தியா வெள்ளைக் காரனின் அறிவின் விருத்தி! தமிழரால் இதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று சொல்லும் நபர்களிற்கு ஒரு சிறிய அறிவிப்பு.

எம் தமிழ் வரலாற்றில் விசுவாமித்திரர் என்ற முனிவர் திரிசங்கு என்ற அரசனிற்காக பூமிக்கு வெளியில் அந்தரத்தில் மிதக்கும் தனி சொர்க்க இராச்சியத்தையே செய்து கொடுத்தார் என்ற வரலாற்றை. எடுத்துக் காட்டினால். இன்று விஞ்ஞானிகள் செய்யும் கண்டுபிடிப்புக்கள் ஒன்றும் பெரிதல்ல மற்றும் புதிதல்ல என்று ஆதாரபூர்வமாக கூறலாம்.

எதிர்காலம் என்றோ அகழ்வாகும். – அன்றும்,
நிகழ்காலம் ஒன்றே இடைக்கூறும்.

சிந்தனை சிவவினோபன்.

எது நியாயமான தண்டனை

வெள்ளை உடையில் புள்ளி மானாகத் துள்ளி ஓடினாள் பள்ளிக்கு செல்லும் இளம் பருவ சிட்டு இளவரசி. பெயருக்கு ஏற்ற இளவரசியாகத்தான் திகழ்ந்தாள் அவள். சிவந்த நிறமும் மெலிந்த தோற்றம் கொண்ட அவள் அழகுதான். தான் என்ற அகங்காரம் அவளுக்குண்டு. அழகு மட்டுமல்ல அறிவாளியும் கூட. கொஞ்சம் திமிரும் கொண்ட அவள் யாருடனும் அதிகம் கதைக்க மாட்டாள். அதனால் தலைக்கனம் பிடித்த பெண் என்னும் பெயரும் அவளுக்குண்டு. பெண்கள் பாடசாலையில் படிக்கும் அவளுக்கு ஆண்களிடம் பழகும் சந்தர்ப்பங்கள் குறைவுதான்.

உயர்தர வகுப்பில் படிக்க ஆரம்பித்த பின் மாலை நேர வகுப்பிற்கு தனியார் பாடசாலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள் படிப்பில் கெட்டிக்காரி. அவள் மருத்துவத் துறையை தெரிவு செய்திருந்தால் அங்கு தான் அவளுக்கு ஆண்களின் தொல்லைகள் ஆரம்பித்தன அவள் யாரையும் கணக்கெடுக்கவில்லை படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால்

திரும்பத்திரும்ப அவளுக்குத் தொல்லை கொடுத்த ஆண்களிடம் அவள் சாதுர்யமாகப் பேசி விலகிக் கொண்டால் ஆனால் மோகன்ராஜ் என்னும் பையன் அவன் தொடர்ந்தபடி இருந்தான் தான் அவளை காதலிப்பதாகவும் தன்னை காதலிக்கும் படியும் வற்புறுத்தினான்.

அவன் ஒரு பணக்கார வீட்டுப் பையன் எப்பொழுதும் ஒரு நண்பர் வட்டாரம் அவனை சுற்றி இருக்கும் சிகரெட் பிடிக்கும் பழக்கமும் அந்த நண்பன் கூட்டத்தில் இருந்தது தண்ணியடிக்கும் பழக்கம் கூட அவர்களிடம் இருப்பதாக அவர்களின் ஆசிரியர் கண்டதையும் அவள் அறிவாள்

எவ்வளவுதான் அவள் விலகிச் சென்றாலும் மோகன்ராஜ் விடுவதாயில்லை காதல் கடிதம் கொடுக்க ஆரம்பித்தான் இளவரசி கடிதத்தை வாசிக்காமல் அவர்கள் முன்னிலையிலேயே கிழித்துப் போட்டு விட்டாள். மோகன்ராஜ் ஆத்திரப் பட்டான் சம்மதம் சொல்லி விடு இல்லாவிட்டால் உயிருடன் இருக்க மாட்டாய் என வெருட்டத் தொடங்கி விட்டான்

என்னடா செய்வாய் என கேள்வி கேட்டு மடக்கினால் இளவரசி கோபம் தலைக்கேற மோகன்ராஜ் மெதுவாக சிரித்தான் பயந்துவிட்டான் என இளவரசி எண்ணினாள். மருத்துவத் துறைக்கான புதுமுக பரிட்சை நெருங்கிவிட்டது இளவரசி மனதை அமைதியாக்கி கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினாள். மோகன்ராஜ் தொல்லையுமற்ற இந்த நிலையில் அவள் நன்றாகப் படித்து பரிட்சை எழுத ஆயத்தமானாள்

அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது மாலை ஆறு மணி போல் அவள் துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது யாரோ அழைப்பது கேட்டு திரும்பிப் பார்த்தால் ஐயோ என அலறினாள் முகம் எல்லாம் எரிந்து அவளது நெஞ்சுப் பகுதியும் எரிந்தது, அவள் அலறி துடித்தாள் சத்தம் கேட்டு அங்கு கூடிய மக்கள் உடனடியாக அவளை வைத்தியசாலையில் சேர்த்தனர்

அமில வீச்சுக்கு இலக்காகி அவள் மூன்று மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினாள்

அவளது முகத்தில் தழும்புகள் இல்லாத போதும் கழுத்துப் பகுதியும் நெஞ்சுப் பகுதியும் கூடுதலாக பாதிக்கப்பட்டிருந்தது மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு உடலில் மாற்று பகுதிகளிலிருந்து சதை எடுத்து ஒட்டித்தான் சரிபடுத்த முடிந்தது அப்படியிருந்தும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அவருடைய மார்பு பகுதியில் ஏற்பட்ட உட்சேதங்களால் பால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவளுடைய குழந்தைக்குக் கூட பாலூட்ட முடியவில்லை

குற்றம் செய்தவனை உடனடியாக காவல்துறை பிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டது தான் ஆனால் பாதிக்கப்பட்ட இளவரசி ஆயுள் முழுக்க தண்டனை அனுபவிக்கின்றாலே?

காதலை ஏற்க மறுத்ததற்காக இத் தண்டனையா? இது நியாயமாகுமா?


எழுத்து,
மங்கை அரசி.

காற்றில் ஒரு மாற்று உணவு!

மனிதன் உயிர் வாழ காற்று அவசியமானது, ஆனால் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு மனிதனால் உயிர்வாழ முடியாது. சுவாசத்திற்கு உதவும் காற்றானது உணவையும் தந்து விட்டால் நல்லது தானே அதுமுடியுமா? முடியும் என்கிறார்கள் பின்லாந்தை சேர்ந்த “சோலார் புட்ஸ்”( Solar Foods).

காற்றிலேயே மாசாகவே கணிக்கப்படும் CO2 காபனீரொட்சைட்டு வாயுவை, சூரிய மின்சாரம் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு ‘சோலெய்ன்’ என்னும் பெயருடைய சத்துமாவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது சோலார் புட்ஸ்.

தானியங்களை சேர்த்து செய்யும் சத்து மாக்களில் இருக்கும் சுவை, புரதம் கார்போஹைட்ரேட் மற்றும் சிறிது கொழுப்பும் சேர்ந்த சோலெய்ன் புரதமாவைக், காற்று மாசில் இருந்து சோலார் புட்ஸ் தயாரிக்கின்றது.

ஒரு கிலோ சோலெய்ன் தயாரிக்க எரிபொருள் செலவு குறைவு, ஒரு கிலோ சோயாவை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீர் தேவை ஆனால் சோலெய்னிற்கு வெறும் 10 லிட்டர் தண்ணீரே போதும். பருவ நிலை மாற்றத்தினால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உணவிற்கும் பஞ்சம் ஏற்படாமல், மனிதனுக்கு சத்துணவு மாவாக சோலெய்ன் மாவை விற்பனை செய்யலாம் என சோலார் புட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முன்னைய காலங்களில் முனிவர்களும் யோகிகளும் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு உணவு இன்றி நிஷ்டையில் இருந்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகள் காற்றிலிருந்து தமக்கான உணவையும் நீரையும் எடுத்துக் கொள்கின்றன என்றும் சொல்லப்படுகின்றது. இதுபோன்று இப்போதய விஞ்ஞானிகளும் அதே காற்றில் இருந்து நேரடியாக உணவை தயாரிக்க தொடங்குகின்றார்கள்.

காற்றின் கழிவில் உணவு இருக்கின்றது, மனிதனின் கழிவாக கணிக்கப்படும் சிறுநீரில் நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம் போன்ற சரிவான பொருட்கள் உள்ளன, இவற்றை தாவரத்திற்கான உரமாக மாற்ற முடியும் என்கின்றது அறிவியல். ஐரோப்பிய கடல் கண்காணிப்பு அமைப்பு(E.O.O.S) சுவிஸ்லாந்து நீர் ஆராய்ச்சி நிலையம் (E.A.W.A.S) குளியலறை கலன்களைத் தயாரிக்கும் லாபென் ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக ஆராய்ந்தன கழிப்பிடங்களிலிருந்து சிறுநீரை பிரித்து எடுத்து, கிருமிகளின்றி சுத்திகரித்து, சுத்தமான உரமாக உருவாக்கினர். இந்த உரத்திற்கு “ஆரின” எனப் பெயரிட்டுள்ளனர்.

ஆரின் உரத்தை எல்லா வகை செடிகளிற்கும் போடலாம், என சுவிஸ் வேளாண்மை துறை சான்று வழங்கியுள்ளது. பொதுக் கழிப்பிடங்களில் உரத்தொழிற்சாலை உருவாக்கும் இத் திட்டம் நல்லதுதானே!


எழுத்து,
மங்கை அரசி.

அறிவியலுடன் கூடிய ஆன்மிகம்

கண்ணுக்குப் புலப்படாத உயிருள்ளவரை மனித வாழ்வு உடல் இயக்கம் உள்ளதாக இருக்கும். மின்சாரம் மின் கம்பிகளில் ஓடுவதை போல உடலில் உயிர் ஓடிக்கொண்டு இருக்கின்றது. மின்னோட்டத்தின் தடையோ மாற்றமும் ஏற்பட்டால் அந்தக் கருவி பழுதாகிவிடும் இதைப்போலவே உயிர் ஓட்டத்தில் மாற்றமோ தடையோ ஏற்பட்டால் உடலில் வலி நோய் என்பன ஏற்படும் உறுப்புக்கள் பாதிக்கப்படும் மின்சாரம் செல்லும் கம்பியை சுற்றி காந்தம் உருவாவதை போலவே மனித உடலை சுற்றி காந்த அடர்த்தி இருக்கும் இந்த ஜீவகாந்த அடர்த்தி ஒருவனின் அறிவாட்சித் திறனோடு தொடர்பு கொண்டது என்பதை தற்கால மருத்துவம் மனோவியல் மற்றும் தத்துவ முறைகள் நிரூபித்துள்ளன.

ஒரு மனிதனின் உடல் மன ஆற்றல்களை மேம்படுத்தி அழகியல் பழக்கம் வாழ்வியல் தத்துவங்களை ஒத்துப் போவதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனிற்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளான மற்றவர்களிடம், அன்பாகவும் நன்றியுணர்வுடன் பழகுதல், தனது தவறுகளை திருத்திச் செயல்படும் மனத்திறன், சூழ்நிலைகளைக் கட்டுப்பாடுடனும் சுய ஒழுக்கத்துடனும் கையாளுதல், நல்லெண்ணத்துடன் கூடிய நேர்மை குணம், புதிய சவால்களை எதிர்கொள்ளும் துணிவு இவை அனைத்தும் ஆன்மீகம் கற்றுக் கொடுக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை

“மதங்களும், கலைகளும், விஞ்ஞானமும் ஒரு மரத்தின் பல்வேறு கிளைகள்” என்று நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகின்றார். பரிமாண வளர்ச்சி தத்துவத்தை மொழிந்த சார்லஸ் டார்வின் “மனித குலமும் இந்த பிரபஞ்சமும் இறைவன் இருப்பதற்கான மிகப்பெரிய அத்தாட்சி” என்கின்றார். இன்றைய தொலை தொடர்பு தொழில் நுட்பத்தின் தந்தையான விஞ்ஞானி மார்க்கோனி “இறை உணர்வுடன் ஜெபத்தின் சக்தியில் அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்குண்டு, நான் ஒரு கத்தோலிக்கன் என்பதனால் மட்டுமல்ல நான் ஒரு விஞ்ஞானி என்பதனாலும் இறை நம்பிக்கை உடையவனாக இருக்கிறேன்.” என்கிறார் மார்க்கோனி.

ஆன்மீகமும்  இறை நம்பிக்கையும் அறிவியலுக்கு ஏற்புடையது அல்ல என்பது போன்ற வாதத்தை சிலர் வைக்கின்றார்கள். அது தவறானது, தன்னம்பிக்கையை ஆன்மீகம் வளர்கின்றது.  தோல்வியை கண்டு துவளாத மன நிலையை ஏற்படுத்துகின்றது.

உடல் உள மன ஆற்றல்களை மேம்படுத்தும் வழிமுறைகள் பகவத்கீதையில் காட்டப்பட்டுள்ளது சிறந்ததொரு அறிவியல் நூலாக திருமந்திரம் காணப்படுகின்றது. பல அறிவியல் விடயங்கள் அதில் காட்டப்பட்டுள்ளது. பொதுமறையாம்  திருக்குறளில் வாழ்வியல் அறிவுரைகள் அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது. இவை மட்டுமல்ல, ஆராய்ந்து பார்த்தோம் என்றால் ஆன்மீக நூல்கள் என நாம்  விலக்கி வைக்கும் பல நூல்களில் அறிவியல்  மிகுந்து இருப்பதும் நோயைத் தீர்த்து வைப்பதற்கும்,  தணித்து வைப்பதற்கும், உருவாகாமல் இருப்பதற்குமாகவும்  உணவே மருந்து  எனவும்  இங்கே அதிகமாக பொக்கிஷங்கள் அறிவுடன் விளக்கப்பட்டுள்ளன.

இவற்றை மத வேறுபாடின்றி புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகின்றது.


எழுத்து,
மங்கை அரசி.