Month: April 2018

Why April Fool? Why April 1st?


எதற்காக இந்த முட்டாள்கள் தினம் என்று சிந்திப்பவர்கள் தான் புத்திசாலி, அப்படிச் சிந்தித்து மற்றவர்களை முட்டாள்களாக்குவதை விட நாம் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று எப்போது எண்ணத் தொடங்குகின்றோமோ அன்று நாம் அனைவரும் அதி புத்திசாலி ஆகிவிடுவோம்.

இல்லாவிட்டால் நாம் 10 பேரை முட்டாள்கள் ஆக்கும் அதே நேரம் எம்மை 1000 பேர் முட்டாளக்கிவிட்டுச் சென்று விடுவார்கள். ஆனாலும் என் இந்த முட்டாள்கள் தினம் உருவானது என்ற கதை ஒரு சுவாரசிக்கமான கதை தான். வாருங்கள் அந்தக் கதையைப் பார்ப்போம்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் நாள்காட்டியில் ஏற்படுத்திய மாற்றமே ஆகும். அதாவது முன்பிருந்த நாள்காட்டியில் April மாதம் முதலாம் திகதி தான் வருடப் பிறப்பு என்று ஒரு முறையை அறிமுகப் படுத்தினார்கள். இன்று கூட தமிழ் நாள்கட்டியில் April 14 அல்லது 15 நாள் அதாவது தமிழுக்கு சித்திரை வரும் முதலாம் திகதி வருடப்பிறப்பு என்று கொண்டாடுவோம் தெரியும் தானே. அதே போன்று கொண்டாடினார்கள் ஒரு குழுவினர்கள். ஆனால் இன்னுமொரு குழுவினர்கள் அதைத் தவறு என்று சொல்லி தை மாதம் முதலாம் திகதி தான் வருடப் பிறப்பு என்றனர். அதனால் இரண்டு குழுவினருக்குள்ளும் பிரச்சனை மூண்டது அதன் விளைவாக இந்தப் பிரச்னையை முடித்து வைக்க, ஒரு வருடத்தில் இரண்டு வருடப் பிறப்பைக் கொண்டாடத் தொடங்குவோம் என்று முடிவுக்கு வந்தனர். அதே போல் அனைவரும் தை மாதம் முதலாம் திகதி ஒற்றுமையாக வருடப் பிறப்பை கொண்டாடினர். அதன் பின் சித்திரை முதலாம் திகதி வந்தது. அந்த நாளை வருடப் பிறப்பாக கொண்டாடுவோம் என்று இரண்டு குழுவினரும் முடிவெடுத்து ஒரு பகுதியில் கொண்டாட இடத்தை ஏற்படு செய்து ஒன்று கூடுவோம் என்று கூறிவிட்டு பங்குனி 31 ஆம் திகதி எதிராளிக்கு குழுவினர்கள் அந்த பகுதிக்கே வராமல் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து விட்ட்னர்.

இதனால் கொண்டாடுவோம் என்று வந்த குழுவினர்கள் ஏமாந்து பொன்னார், சோகமாக வீடு திரும்பியபோது அவர்களை பார்த்தவர்கள் எல்லாம் நீங்க முட்டாள்கள் ஆகிவிடதீர்கள் என்று சொல்ல, அதுவே காலப் போக்கில் சித்திரை 1 ஆம் திகதி முட்டாள்கள் தினம் ஆனது. ஒரு இனத்தை அவமானப் படுத்தும் இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமளிக்கும் நாளா என்று நினைத்துப் பாருங்கள். வருகின்ற வருடம் கொண்டாட வேண்டுமா என்று சிந்தியுங்கள்

உங்கள் மனதில நல்லதை விதைத்த இந்த விம்பத்தை உங்கள் விம்பமாக எண்ணி உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.
நன்றி வணக்கம்.