Kavithai

This category is only for people who like to read beautiful Poem in every day

தளர்விலும் வாழ்வெழுது ஆளுமைகள்

அளவில்லா அன்புடன் அனைவரும் சுற்றி நின்று பார்க்க,
ஆசைகள் இருந்தும் அசைந்து படுக்க முடியா உடல்.
இளகிய முள்ளந்தண்டு எடுத்து வைக்க இயலாக் கால்கள்,
ஈ மொய்த்தால் கூட எதுவும் செய்யாக் கை.
உள்ளம் உலகை சுற்ற ஏங்கும், உற்றுப்பார்த்தால்
ஊன் உடம்பாய் நான்கு சுவருள்ளடக்கம்.
என் நிலமை அறிய முடியா மயக்கம்,
ஏன் என்று கேட்க என் நாவும் தடக்கும்
ஐயம் ஒன்றே மிச்சம், அகிலம் மீது நான் இப்போ புதிய எச்சம்!
ஒவ்வொரு நாளும் எழுந்து நிற்க முனைப்பேன்,
ஓங்கி ஒலிக்கும் வாழ்வை எழுத நினைத்பேன் – நான்
ஔவையல்ல ஆறுமாதக் குழந்தை(யென்) தளர்விலும்
ஃதே வாழ்வெழுதும் என் ஆளுமையே ஆரம்பம்.

சிந்தனை சிவவினோபன்,

மோனையில் வீற்றுள்ள மானே.

கவிதையை கவனமாக வாசியுங்கள்.
இதில் ஒரு மந்திரம் ஒளிந்துள்ளது.
தலைப்பில் விடையுண்டு.

மோனையில் வீற்றுள்ள மானே.

பேரிடர் கொண்ட வாழ்வினில்,
தையலே என்தன் தலை நீயே.

பெரும் பணி புரிந்திடும்,
துரும்பெனத் துவண்டிடும் – உயிரே,
ம்முறை உன் துயர், 
பையவே மறையுமோ?

மணவறை அழகு நீ,
ங்ஙன உயர்வினி, – குழவியைக்
கையேந்தும் இறைவி நீ.

மகப்பேறு கண்டபின் 
ட என்ற எழுத்தைப் போல், 
ந்தக் குழவியைச் சுமந்திடும், 
தைரியத் தாய்மை நீ.

அன்பினில் ஊறிய நடமாடும், 
ரிக் யசுர் சாம அதர்வணம் நீ
வைத்திடும் வாதமே வீட்டினுள் சட்டமே. 

தென்னை போல் தன்னையே தாரைவார்க்கும், 
ரிஷி உன்னை நான் எண்ணியே தலைவணங்கில், 
வையகம் வாழுமோ? உய்வுறுமோ?

பேதமின்றி பெற்றேடுக்கும் தாய்மையே, 
ரிஷப வாகனம் போல் வீற்றிருக்கும அன்னையே, – உன்
இளமையதை எனக்களித்த இறைமையே, 
ம்சைகள் பொறுத்திட்ட என்னினிய பெண்மையே,

வாழ்க வாழ்க 
உன்னால் ஓடிடும் உலகக் கடிகாரம், 
உன்பேர் பாடிடும் ஒவ்வொரு நாளும்.
வாழ்க வாழ்க.

சிந்தனை சிவவினோபன்

நீ யார்?

மரம்,
வேடனின் கையில் வில்லம்பு,
குருடனின் கையில் விழிக்கம்பு.

சிந்தனை சிவவினோபன்