News

This category is only for people who like to read new News in every day

90 மில்லியன் EURO விழுந்திருக்கும் பரிசுத்தொகை, யாருக்குத் தெரியுமா?

90 மில்லியன் யூரோ பணம் பரிசாக விழுந்து இருக்கின்றது. என்றால் நம்புவீர்களா ஆம் ஜெர்மனியில் NRW என்ற பகுதியில் மூன்ஸ்டர் லேண்ட் (Münsterland) என்ற இடத்தில் 90 மில்லியன் Euro பணத்தொகை Lotto பரிசு விழுந்துள்ளது.

மாசி மாதம் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை யூரோ ஜாக்பாட் எனப்படும் Lotto, 90 மில்லியன் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது 5 சரியான விளக்கங்களும் இலக்கங்களும் 2 சரியான இலக்கங்களும் மொத்தமாக 7 சரியான இலக்கங்களும் விழுந்திருந்தால், யாருக்கு விழுகின்றதோ, அவருக்கு 90 மில்லியன் பணப்பரிசு கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிர்ஷ்டவசமாக அந்த வெள்ளிக்கிழமை யாரோ ஒருவருக்கு இந்த ஏழு இலக்கங்களும் சரியாக விழுந்துவிட்டது. அவ்வாறு விழுந்த இலக்கங்கள் இவைகள்தான் 7, 16, 22, 36, 44 3, 4
ஆனால் மூன்று நான்கு கிழமைகள் ஆக யாரும் அந்த அட்டையை கொண்டு வந்து அந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதனால் யாருக்கு இந்த 90 மில்லியன் பணத்தொகை கிடைத்திருக்கிறது என்று அனைவரும் ஆர்வமாக காத்து இருந்தார்கள். இப்போது கடந்த வாரம் யாரோ ஒரு நபர் தன்னுடைய அடையாளத்தை காண்பித்து அந்த 90 மில்லியன் Euro பணத் தொகையை பெற்றிருக்கின்றார். ஆனால் தான் யார் என்பதை வெளியில் அறியத் தர வேண்டாம் என்றும் கூறியிருக்கின்றார். அதற்கான காரணம் அத்தனை தொகை பணத் தொகையால் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. என்பதனால் தன்னை பற்றி வெளியில் அறியத் தர விரும்பவில்லை. என்று அவர் கூறியிருக்கின்றார் இந்தத் தகவலும் அதுவும் ஜெர்மனியில் இருக்கும் தமிழர்களுக்கு இது ஒரு சுவாரசியமான தகவலாக இருக்கும் என்பதனால் அறியத்தருகின்றோம். உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் யாராவது வேலையை விட்டுவிட்டு வீட்டில் நிற்கின்றார்கள் என்றால் உடனடியாக தெரிந்துகொள்ளுங்கள் அவருக்குத்தான் அந்த 90 மில்லியன் ஈரோ பணத்தொகை பரிசாகக் கிடைத்திருக்கிறது என்று. 🙂

Why April Fool? Why April 1st?


எதற்காக இந்த முட்டாள்கள் தினம் என்று சிந்திப்பவர்கள் தான் புத்திசாலி, அப்படிச் சிந்தித்து மற்றவர்களை முட்டாள்களாக்குவதை விட நாம் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று எப்போது எண்ணத் தொடங்குகின்றோமோ அன்று நாம் அனைவரும் அதி புத்திசாலி ஆகிவிடுவோம்.

இல்லாவிட்டால் நாம் 10 பேரை முட்டாள்கள் ஆக்கும் அதே நேரம் எம்மை 1000 பேர் முட்டாளக்கிவிட்டுச் சென்று விடுவார்கள். ஆனாலும் என் இந்த முட்டாள்கள் தினம் உருவானது என்ற கதை ஒரு சுவாரசிக்கமான கதை தான். வாருங்கள் அந்தக் கதையைப் பார்ப்போம்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் நாள்காட்டியில் ஏற்படுத்திய மாற்றமே ஆகும். அதாவது முன்பிருந்த நாள்காட்டியில் April மாதம் முதலாம் திகதி தான் வருடப் பிறப்பு என்று ஒரு முறையை அறிமுகப் படுத்தினார்கள். இன்று கூட தமிழ் நாள்கட்டியில் April 14 அல்லது 15 நாள் அதாவது தமிழுக்கு சித்திரை வரும் முதலாம் திகதி வருடப்பிறப்பு என்று கொண்டாடுவோம் தெரியும் தானே. அதே போன்று கொண்டாடினார்கள் ஒரு குழுவினர்கள். ஆனால் இன்னுமொரு குழுவினர்கள் அதைத் தவறு என்று சொல்லி தை மாதம் முதலாம் திகதி தான் வருடப் பிறப்பு என்றனர். அதனால் இரண்டு குழுவினருக்குள்ளும் பிரச்சனை மூண்டது அதன் விளைவாக இந்தப் பிரச்னையை முடித்து வைக்க, ஒரு வருடத்தில் இரண்டு வருடப் பிறப்பைக் கொண்டாடத் தொடங்குவோம் என்று முடிவுக்கு வந்தனர். அதே போல் அனைவரும் தை மாதம் முதலாம் திகதி ஒற்றுமையாக வருடப் பிறப்பை கொண்டாடினர். அதன் பின் சித்திரை முதலாம் திகதி வந்தது. அந்த நாளை வருடப் பிறப்பாக கொண்டாடுவோம் என்று இரண்டு குழுவினரும் முடிவெடுத்து ஒரு பகுதியில் கொண்டாட இடத்தை ஏற்படு செய்து ஒன்று கூடுவோம் என்று கூறிவிட்டு பங்குனி 31 ஆம் திகதி எதிராளிக்கு குழுவினர்கள் அந்த பகுதிக்கே வராமல் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து விட்ட்னர்.

இதனால் கொண்டாடுவோம் என்று வந்த குழுவினர்கள் ஏமாந்து பொன்னார், சோகமாக வீடு திரும்பியபோது அவர்களை பார்த்தவர்கள் எல்லாம் நீங்க முட்டாள்கள் ஆகிவிடதீர்கள் என்று சொல்ல, அதுவே காலப் போக்கில் சித்திரை 1 ஆம் திகதி முட்டாள்கள் தினம் ஆனது. ஒரு இனத்தை அவமானப் படுத்தும் இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமளிக்கும் நாளா என்று நினைத்துப் பாருங்கள். வருகின்ற வருடம் கொண்டாட வேண்டுமா என்று சிந்தியுங்கள்

உங்கள் மனதில நல்லதை விதைத்த இந்த விம்பத்தை உங்கள் விம்பமாக எண்ணி உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.
நன்றி வணக்கம்.