90 மில்லியன் EURO விழுந்திருக்கும் பரிசுத்தொகை, யாருக்குத் தெரியுமா?
90 மில்லியன் யூரோ பணம் பரிசாக விழுந்து இருக்கின்றது. என்றால் நம்புவீர்களா ஆம் ஜெர்மனியில் NRW என்ற பகுதியில் மூன்ஸ்டர் லேண்ட் (Münsterland) என்ற இடத்தில் 90 மில்லியன் Euro பணத்தொகை Lotto பரிசு விழுந்துள்ளது.

மாசி மாதம் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை யூரோ ஜாக்பாட் எனப்படும் Lotto, 90 மில்லியன் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது 5 சரியான விளக்கங்களும் இலக்கங்களும் 2 சரியான இலக்கங்களும் மொத்தமாக 7 சரியான இலக்கங்களும் விழுந்திருந்தால், யாருக்கு விழுகின்றதோ, அவருக்கு 90 மில்லியன் பணப்பரிசு கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிர்ஷ்டவசமாக அந்த வெள்ளிக்கிழமை யாரோ ஒருவருக்கு இந்த ஏழு இலக்கங்களும் சரியாக விழுந்துவிட்டது. அவ்வாறு விழுந்த இலக்கங்கள் இவைகள்தான் 7, 16, 22, 36, 44 3, 4
ஆனால் மூன்று நான்கு கிழமைகள் ஆக யாரும் அந்த அட்டையை கொண்டு வந்து அந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதனால் யாருக்கு இந்த 90 மில்லியன் பணத்தொகை கிடைத்திருக்கிறது என்று அனைவரும் ஆர்வமாக காத்து இருந்தார்கள். இப்போது கடந்த வாரம் யாரோ ஒரு நபர் தன்னுடைய அடையாளத்தை காண்பித்து அந்த 90 மில்லியன் Euro பணத் தொகையை பெற்றிருக்கின்றார். ஆனால் தான் யார் என்பதை வெளியில் அறியத் தர வேண்டாம் என்றும் கூறியிருக்கின்றார். அதற்கான காரணம் அத்தனை தொகை பணத் தொகையால் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. என்பதனால் தன்னை பற்றி வெளியில் அறியத் தர விரும்பவில்லை. என்று அவர் கூறியிருக்கின்றார் இந்தத் தகவலும் அதுவும் ஜெர்மனியில் இருக்கும் தமிழர்களுக்கு இது ஒரு சுவாரசியமான தகவலாக இருக்கும் என்பதனால் அறியத்தருகின்றோம். உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் யாராவது வேலையை விட்டுவிட்டு வீட்டில் நிற்கின்றார்கள் என்றால் உடனடியாக தெரிந்துகொள்ளுங்கள் அவருக்குத்தான் அந்த 90 மில்லியன் ஈரோ பணத்தொகை பரிசாகக் கிடைத்திருக்கிறது என்று. 🙂