Education

This category is only for people who like to learn something in every day

விண்வெளியில் ஒரு சின்ன மின்மினி.

விண்வெளி என்பது, அன்னையின் மடியில் படுத்து அம்புலி பார்த்த காலம் முதல் அனைவரின் மனதிலும் ஒரு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும் இன்பமான இடம் தான் இந்த விண்வெளி. ஆனால் இந்த விண்வெளியில் ஒரு ஆச்சரியமான புதுமை ஒன்று ஏற்படவுள்ளது, என்று சொன்னாலே நம்புவீர்களா? மனிதன் 1600 ஆம் ஆண்டுகளில் விண்ணைப் பார்த்தான், விண்ணில் மின்னும் பொருட்கள், மின்னாப் பொருட்கள் இருப்பதைக் கண்டான், ஆராய்ந்தான். மின்னும் பொருட்கள் நட்சத்திரம், மின்னாப் பொருட்கள் கோள்கள் என்று கண்டறிந்தான்.

2000 ஆண்டுகளில் நான் விண்ணைப் பார்த்தேன் மின்னும் பொருட்கள் மின்னாப் பொருட்கள் கண்டேன். மின்னாப் பொருட்கள் கோள்கள், மின்னும் பொருட்கள் நட்சத்திரம் அல்லது செய்மதி என்று கற்றுக் கொண்டேன். ஆனால் 3000 ஆண்டுகளில் வானில் இன்னுமொரு பொருள் மிகையாக அதிகரிக்கவுள்ளது. அதாவது 3000க்குப் பின் உள்ள குழந்தைகள் விண்ணைப் பார்க்கும் போது விண்ணில் மின்னும் பொருட்கள், மின்னாப் பொருட்கள் இருக்கும். அவை எவை என்று ஆராய்ந்தால் மின்னும் பொருட்கள் நட்சத்திரமும், செய்மதியும். மின்னாப் பொருட்கள் கோள்களும் குவள் உலகமும் ஆகும். அது என்ன குவள் உலகம்? இதோ ஒரு புதிய பயணத்திற்குத் தயாராகுங்கள்.

மனிதன் அறிவில் விருத்தி கண்டு வருகின்றான். அதே நேரம் உயிர்வாழும் காலத்தையும் அதிகரித்து வருகின்றான். இவை இரண்டும் இயற்கைக்கு சற்று முரண்பாடாகும் வேளையில், இயற்கை சமநிலையைத் தேடி, இயற்கை அனர்த்தங்களை உண்டுபண்ணி மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றது. இதை எதிர்வுகொள்ளவே மனிதன் வேறு கிரகங்களிற்குச் சென்று வாழலாமா என்று சிந்தித்து செயல்பட்டும் வருகின்றான். ஆனால் ஒவ்வொரு கோள்களிலும் ஒவ்வொரு குறைபாடுள்ளது. பூமியில் வாழ்ந்து பழகிய மனிதனிற்கு பிற கோள்கள் குறையாக உள்ளது. இதை நிவர்த்தி செய்ய ஒரு புதிய முயற்சி செய்யவுள்ளான். எப்படித் தெரியுமா?


வளமான மண்ணில்லா நாடுகள் கடலில் கப்பல் விட்டு அதிலே வளமான மண்ணை பிற நாட்டில் இருந்து பெற்று விவசாயம் செய்து வருவது எத்தனை பெருக்குத் தெரியும்? பாலை வன நாடுகள், அணு குண்டு துளைத்த ஆசிய நாடு என்று பல நாடுகள் இந்த கடல் மேல் விவசாயம் செய்துவருகின்றது. இதேபோலத் தான் பூமி போன்றே உருளை வடிவில் பெரிய குவளை செய்து அதை சிறிது சிறிதாக பகுதி பகுதியாக விண்ணுக்கு அனுப்பி விண்ணில் ஒரு குவளை உலகை உருவாக்கி, அதை குவள் வீடு (Galaxy Orb House) என்று அழைப்பார்கள். உலகில் நாம் உலகிற்கு வெளியில் நடப்பது போல, அந்த குவள் உலகில் உலகிற்கு உள்ளே நாங்கள், மரம் வளர்த்து வீடு கட்டி வாழ்வோம்.  அதிலே பண முதலைகள் தங்கள் பரம்பரையை பரப்பவுள்ளது. இதைக் கேட்கும் போது, பார்த்தியா வெள்ளைக் காரனின் அறிவின் விருத்தி! தமிழரால் இதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று சொல்லும் நபர்களிற்கு ஒரு சிறிய அறிவிப்பு.

எம் தமிழ் வரலாற்றில் விசுவாமித்திரர் என்ற முனிவர் திரிசங்கு என்ற அரசனிற்காக பூமிக்கு வெளியில் அந்தரத்தில் மிதக்கும் தனி சொர்க்க இராச்சியத்தையே செய்து கொடுத்தார் என்ற வரலாற்றை. எடுத்துக் காட்டினால். இன்று விஞ்ஞானிகள் செய்யும் கண்டுபிடிப்புக்கள் ஒன்றும் பெரிதல்ல மற்றும் புதிதல்ல என்று ஆதாரபூர்வமாக கூறலாம்.

எதிர்காலம் என்றோ அகழ்வாகும். – அன்றும்,
நிகழ்காலம் ஒன்றே இடைக்கூறும்.

சிந்தனை சிவவினோபன்.

காற்றில் ஒரு மாற்று உணவு!

மனிதன் உயிர் வாழ காற்று அவசியமானது, ஆனால் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு மனிதனால் உயிர்வாழ முடியாது. சுவாசத்திற்கு உதவும் காற்றானது உணவையும் தந்து விட்டால் நல்லது தானே அதுமுடியுமா? முடியும் என்கிறார்கள் பின்லாந்தை சேர்ந்த “சோலார் புட்ஸ்”( Solar Foods).

காற்றிலேயே மாசாகவே கணிக்கப்படும் CO2 காபனீரொட்சைட்டு வாயுவை, சூரிய மின்சாரம் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு ‘சோலெய்ன்’ என்னும் பெயருடைய சத்துமாவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது சோலார் புட்ஸ்.

தானியங்களை சேர்த்து செய்யும் சத்து மாக்களில் இருக்கும் சுவை, புரதம் கார்போஹைட்ரேட் மற்றும் சிறிது கொழுப்பும் சேர்ந்த சோலெய்ன் புரதமாவைக், காற்று மாசில் இருந்து சோலார் புட்ஸ் தயாரிக்கின்றது.

ஒரு கிலோ சோலெய்ன் தயாரிக்க எரிபொருள் செலவு குறைவு, ஒரு கிலோ சோயாவை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீர் தேவை ஆனால் சோலெய்னிற்கு வெறும் 10 லிட்டர் தண்ணீரே போதும். பருவ நிலை மாற்றத்தினால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உணவிற்கும் பஞ்சம் ஏற்படாமல், மனிதனுக்கு சத்துணவு மாவாக சோலெய்ன் மாவை விற்பனை செய்யலாம் என சோலார் புட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முன்னைய காலங்களில் முனிவர்களும் யோகிகளும் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு உணவு இன்றி நிஷ்டையில் இருந்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகள் காற்றிலிருந்து தமக்கான உணவையும் நீரையும் எடுத்துக் கொள்கின்றன என்றும் சொல்லப்படுகின்றது. இதுபோன்று இப்போதய விஞ்ஞானிகளும் அதே காற்றில் இருந்து நேரடியாக உணவை தயாரிக்க தொடங்குகின்றார்கள்.

காற்றின் கழிவில் உணவு இருக்கின்றது, மனிதனின் கழிவாக கணிக்கப்படும் சிறுநீரில் நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம் போன்ற சரிவான பொருட்கள் உள்ளன, இவற்றை தாவரத்திற்கான உரமாக மாற்ற முடியும் என்கின்றது அறிவியல். ஐரோப்பிய கடல் கண்காணிப்பு அமைப்பு(E.O.O.S) சுவிஸ்லாந்து நீர் ஆராய்ச்சி நிலையம் (E.A.W.A.S) குளியலறை கலன்களைத் தயாரிக்கும் லாபென் ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக ஆராய்ந்தன கழிப்பிடங்களிலிருந்து சிறுநீரை பிரித்து எடுத்து, கிருமிகளின்றி சுத்திகரித்து, சுத்தமான உரமாக உருவாக்கினர். இந்த உரத்திற்கு “ஆரின” எனப் பெயரிட்டுள்ளனர்.

ஆரின் உரத்தை எல்லா வகை செடிகளிற்கும் போடலாம், என சுவிஸ் வேளாண்மை துறை சான்று வழங்கியுள்ளது. பொதுக் கழிப்பிடங்களில் உரத்தொழிற்சாலை உருவாக்கும் இத் திட்டம் நல்லதுதானே!


எழுத்து,
மங்கை அரசி.

அறிவியலுடன் கூடிய ஆன்மிகம்

கண்ணுக்குப் புலப்படாத உயிருள்ளவரை மனித வாழ்வு உடல் இயக்கம் உள்ளதாக இருக்கும். மின்சாரம் மின் கம்பிகளில் ஓடுவதை போல உடலில் உயிர் ஓடிக்கொண்டு இருக்கின்றது. மின்னோட்டத்தின் தடையோ மாற்றமும் ஏற்பட்டால் அந்தக் கருவி பழுதாகிவிடும் இதைப்போலவே உயிர் ஓட்டத்தில் மாற்றமோ தடையோ ஏற்பட்டால் உடலில் வலி நோய் என்பன ஏற்படும் உறுப்புக்கள் பாதிக்கப்படும் மின்சாரம் செல்லும் கம்பியை சுற்றி காந்தம் உருவாவதை போலவே மனித உடலை சுற்றி காந்த அடர்த்தி இருக்கும் இந்த ஜீவகாந்த அடர்த்தி ஒருவனின் அறிவாட்சித் திறனோடு தொடர்பு கொண்டது என்பதை தற்கால மருத்துவம் மனோவியல் மற்றும் தத்துவ முறைகள் நிரூபித்துள்ளன.

ஒரு மனிதனின் உடல் மன ஆற்றல்களை மேம்படுத்தி அழகியல் பழக்கம் வாழ்வியல் தத்துவங்களை ஒத்துப் போவதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனிற்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளான மற்றவர்களிடம், அன்பாகவும் நன்றியுணர்வுடன் பழகுதல், தனது தவறுகளை திருத்திச் செயல்படும் மனத்திறன், சூழ்நிலைகளைக் கட்டுப்பாடுடனும் சுய ஒழுக்கத்துடனும் கையாளுதல், நல்லெண்ணத்துடன் கூடிய நேர்மை குணம், புதிய சவால்களை எதிர்கொள்ளும் துணிவு இவை அனைத்தும் ஆன்மீகம் கற்றுக் கொடுக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை

“மதங்களும், கலைகளும், விஞ்ஞானமும் ஒரு மரத்தின் பல்வேறு கிளைகள்” என்று நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகின்றார். பரிமாண வளர்ச்சி தத்துவத்தை மொழிந்த சார்லஸ் டார்வின் “மனித குலமும் இந்த பிரபஞ்சமும் இறைவன் இருப்பதற்கான மிகப்பெரிய அத்தாட்சி” என்கின்றார். இன்றைய தொலை தொடர்பு தொழில் நுட்பத்தின் தந்தையான விஞ்ஞானி மார்க்கோனி “இறை உணர்வுடன் ஜெபத்தின் சக்தியில் அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்குண்டு, நான் ஒரு கத்தோலிக்கன் என்பதனால் மட்டுமல்ல நான் ஒரு விஞ்ஞானி என்பதனாலும் இறை நம்பிக்கை உடையவனாக இருக்கிறேன்.” என்கிறார் மார்க்கோனி.

ஆன்மீகமும்  இறை நம்பிக்கையும் அறிவியலுக்கு ஏற்புடையது அல்ல என்பது போன்ற வாதத்தை சிலர் வைக்கின்றார்கள். அது தவறானது, தன்னம்பிக்கையை ஆன்மீகம் வளர்கின்றது.  தோல்வியை கண்டு துவளாத மன நிலையை ஏற்படுத்துகின்றது.

உடல் உள மன ஆற்றல்களை மேம்படுத்தும் வழிமுறைகள் பகவத்கீதையில் காட்டப்பட்டுள்ளது சிறந்ததொரு அறிவியல் நூலாக திருமந்திரம் காணப்படுகின்றது. பல அறிவியல் விடயங்கள் அதில் காட்டப்பட்டுள்ளது. பொதுமறையாம்  திருக்குறளில் வாழ்வியல் அறிவுரைகள் அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது. இவை மட்டுமல்ல, ஆராய்ந்து பார்த்தோம் என்றால் ஆன்மீக நூல்கள் என நாம்  விலக்கி வைக்கும் பல நூல்களில் அறிவியல்  மிகுந்து இருப்பதும் நோயைத் தீர்த்து வைப்பதற்கும்,  தணித்து வைப்பதற்கும், உருவாகாமல் இருப்பதற்குமாகவும்  உணவே மருந்து  எனவும்  இங்கே அதிகமாக பொக்கிஷங்கள் அறிவுடன் விளக்கப்பட்டுள்ளன.

இவற்றை மத வேறுபாடின்றி புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகின்றது.


எழுத்து,
மங்கை அரசி.

உங்கள் ஏழாவது தலைமுறையின் தலையெழுத்து. 

உங்கள் ஏழாவது தலைமுறையின் தலையெழுத்து. 

அறிவியல் வளர்ந்து வரும் இந்த அகிலத்தில் இலகுவாக எதிர்காலத்தைக் கணித்துவிட முடிகின்றது. ஆனால் கணிப்புக்கள், கணித்தபடி நடக்குமா என்றால், இதோ வாருங்கள் பார்ப்போம் எங்கள் ஏழாவது தலைமுறை எப்படி இருக்கும் என்று.

2000ஆம் ஆண்டில் இணையத்தளம் பிரபல்யமடையும் போது எவரும் எதிர்பார்த்திகருக்கமாட்டார்கள், காசை விடப் பெறுமதியானது கணனியில் சேமிக்கப்படும் எம் தகவல்கள் என்று. ஆம் இந்த இலத்திரனியல் உலகில் எமக்கு எத்தனையோ ஆடம்பர பொருட்கள் மலிவாகவோ அல்லது இலவசமாகவோ கிடைத்துவிடுகின்றது. ஆனால் இலவசமாகக் கொடுப்பவர்கள் எப்படி சம்பாதிக்கின்றார்கள் என்று தெரிந்துகொண்டீர்கள் என்றால் எந்த இலவசத்தையும் இனிமேல் பயன்படுத்தவே மாட்டிர்கள். இலவசமாகக் ஒரு பொருள் கிடைக்கின்றது என்றால் அந்தப் பொருளை பெற்றுக்கொள்ளும் நீங்கள் அங்கே உங்களை விற்கிறீர்கள்  என்பது தான் உண்மை.

இலவசத்திற்கும் இந்தத் தலைப்பிற்கும் ஏழாவது தலைமுறைகும் என்ன தொடர்புண்டு என்று ஆச்சரியமாகப் பார்க்கும் உங்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் காத்துள்ளது. ஏழாவது தலைமுறையில் செலவு செய்ய காசே இருக்காது என்பது தான் அந்த அதிர்ச்சி. அதை புரிந்து கொள்ள 2000ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள மாற்றத்தை கோர்வையாக கோர்த்துக் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஒரு சில அதி புத்திசாலிகளுக்கு மட்டும் தோன்றும் சிந்தனை எதுவெனில் ஏழாவது தலைமுறையில் நாமே இருக்க மாட்டோமே பின்பெதற்கு இதை எல்லாம் பற்றி நாம் சிந்தித்து சலித்துக் கொள்ளவேண்டும், என்று சிந்திக்கும் நபரில் நீங்களும் ஒருவரா? இல்லை இந்தச் சிந்தனை உள்ள நபர் உங்கள் அருகில் உள்ளாரா? இருந்தால் அவரின் காதில் திருகி அருகில் அமர்த்தி மேற்கொண்டு வாசிக்க ஆரம்பிக்கவும்.

பணம் எவ்வாறு உருவானது என்று தெரிந்து கொண்டால் பணம் எவ்வாறு அழியப் போகின்றது என்று புரிந்துகொள்ள முடியும். ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சிறப்பிருந்தது. ஒரு நாட்டில் உணவு, இன்னொரு நாட்டில் உடை, ஒரு நாட்டில் அணிகலன் இன்னொரு நாட்டில் ஆயுதம் என்று இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சிறப்புகள் இருந்தன. ஆதிகால மனிதனுக்கு அடுத்தவர் பொருள் மீது ஆசை வந்தால் உடனடியாக போர்புரிந்து ஆசைப் பட்டதை அடைந்து மகிழ்ந்தான். அதன் பின் அறிவு வளர, இருந்த சிறப்புகளை மற்றவர்களிடம் பகிர்ந்து வாழ்ந்துவந்தனர் அதனால் பொருட்களின் பெறுமதி என்று ஏதும் கிடையாது, யாருக்கு எது தேவையோ அதை பெறுவதற்கு தன்னிடம் உள்ளதைக் கொடுத்து பரிமாற்றிக் கொண்டனர் அதுவே பண்டமாற்று என்று பேர்பெற்றது. இந்தப் பாண்டமாற்றுத் தான் உலகின் முதல் வர்த்தகத்திற்கு வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து உலோகத்தில் மோகம் கொண்ட மனிதன் உலோகத்தை உருக்கி அதை ஒரு அடிப்படை பொருளாக்கி நாணயப் பரிமாற்றை கண்டுபிடித்தான்.  இப்படித்தான் காசு என்ற காலன் உருவானான். காலனுக்கு காலனாக வந்த புதிய பொருள் தான், கணனி என்பதை அறிந்திடாத எம் பாட்டன் செய்த அதே தவறை நீங்களும் செய்யாதிருக்கவே இந்த எச்சரிக்கைக் கட்டுரை உருவாக்கியுள்ளேன்.

ஒரு காலத்தில் உணவை மட்டும் எதிர்பார்த்து ஓடிய மனிதன் இன்று உலகில் எதை நோக்கி ஓடுகின்றான் என்று தெரியாமலேயே ஓடும் நிலை உருவாகியுள்ளது. எமக்குத் தேவையானதை நாமே உருவாக்குவோம் என்று உலகிற்கு முறையான விவசாயத்தை அறிமுகம் செய்தான் தமிழன். உலகின் மற்றைய பகுதியின் உணவுமுறையையும் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள உணவுமுறையையும் கவனித்துப் பார்த்தால் இந்த உண்மை புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இருக்கும்.

தமிழரும் மனிதர்கள் தானே!, மனிதர்களின் குணம் மாற்றத்தை எதிர்பார்ப்பதும், அதற்கேற்றால்ப் போல் தன்னை மாற்றிக் கொள்வதும். அதனால் தான் இன்று விவசாயிகளின் நிலை தற்கொலையில் வந்து நிற்கின்றது. ஆனால் இந்த நிலையும் இப்படியே நின்றுவிடாது, மாறிக்கொண்டே வரும் உலகில், இன்றிலிருந்து ஏழாவது தலைமுறையில் இந்த உலகில் எவர் கைகளிலும் காசிருக்காது. ஆகவே உங்கள் கொள்ளுப் பேரனுக்கோ அல்லது பேத்திக்கோ உதவ விரும்புகிண்றீர்களா? பணத்தைச் சேர்த்து வைக்காதீர்கள், படிப்பைச் சேர்த்து வையுங்கள். அதாவது ஒருவனின் கல்வி காலங்கள் தாண்டிப் பேசும் என்று தமிழர்கள் சொன்னதை இன்று விஞ்ஞானி ஆராய்ந்து கண்டு பிடித்துச் சொல்கின்றான் DNA என்று ஒன்று உண்டு அதன் மூலம் 7 தலை முறை தகவல்கள் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உண்டு என்று கூறப்படுகின்றது.

அது எப்படி சாத்தியம் என்றால், இதிகாசக் கதைகளை எடுத்துக் பாருங்கள் புயபலம் பொருந்திய ஒரு ஆண்மகன் சுமார் ஆறடி உயரம் கொண்டவனாக இருப்பான் என்று கூறப் படுகின்றது. ஆனால் ஒரு மகன் தந்தையை விட உயர்வாக இருப்பான். இப்படி இருக்கையில் நீங்கள் இப்போதும் எப்படி அதே ஆறடி உயரத்திலேயே இருப்பீர்கள். குறைந்தது 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதைகளில் உள்ளவர் 6 அடி உயரம் இருந்திருந்தால் இப்போது இருக்கும் மனிதர்கள் குறைந்தது 9 அடி உயரமாவது வளர்ந்திருக்க வேண்டாமா? ஆனால் இப்போதும் அதே உயரத்தில் இருப்பதற்கு இந்த DNA தான் காரணமாக உள்ளது. ஆகவே ஏழாவது தலைமுறையில் பிறக்கவுள்ள உங்க 6 வது தலைமுறைக்கு உதவ நினைக்கும் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை தினமும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள். அதை மனதில் தெளிவாகப் பதிந்து கொள்ளுங்கள். அவை அனைத்தும் உங்க எதிர்கால சந்ததியிற்கு உதவியாக இருக்கும். இப்போது புரிகின்றதா நீங்கள் பள்ளியில்ப் படிக்கும் போது, உங்கள் வகுப்பில் இருக்கும் ஒரு சில மாணவர்கள் மட்டும் ஆசிரியர் சொன்னவுடனடியாக அதை புரிந்து சரியான பதிலை கூறுவார்கள் அதற்கு ஒரே காரணம் அவரின் DNA இல் உள்ள மூதாதயரின் அறிவு ஞானம்.

ஏழாவது தலைமுறையில் ஒவ்வொரு மனிதனின் நோக்கமும் உணவு சேர்ப்பதாக மட்டுமே இருக்கும்.  இப்போது கணனி மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் அனைத்தும் மனிதர்களையும் வீட்டினுள் அடைத்து வைத்து ஆட்சி செய்வதற்கு ஒரே காரணம், பணம் ஒன்று மட்டும் தான். அது எப்படி என்றால், பெரிய நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க உங்களிடம் தங்கள் பொருட்களை விற்கின்றது, ஆகவே விற்கும் நிறுவங்களிற்கு உங்களின் விருப்பு வெறுப்பு எது வென்று தெரிய வேண்டும் அதைத் தெரிந்துகொள்ளவே செயல்திறன் கூடிய இலத்திரனியல் சாதனங்களை உங்கள் வீடிற்கு அனுப்பியது, இப்போது உங்கள் உடலிலேயே பொருத்திவிட்டது. Smartwatch, Smartphone, Smartback, Smartcard எல்லாப் பொருட்களின் பெயரையும் பார்த்தீர்கள் என்றால் Smart என்று இருக்கும் அதாவது பொருட்கள் எல்லாம் Smart ஆகிவிட்டன  மனிதர்கள் நாம் முட்டாள் ஆகிவிட்டோம். பணம் என்ற ஒன்றின் அழிவில் இந்த அகிலமே மீண்டும் ஆரம்ப காலத்தை நோக்கிச் செல்லப்போகிறது.

கச்சாய் எண்ணெய் தீர்ந்தவுடன் தொழிற்ச்சாலையும் வாகனங்களும் அழிந்துவிடும். தாவரங்களை அழித்து வீடு கட்டும் போது வெப்பநிலை அதிகரித்து உணவும் உயிர்களும் அழிந்துபோகும், இவை அனைத்தைம் பார்த்து வேதனைப்பட்டு, மகாபாரதத்தில் தர்மருக்கு சொர்க்கத்தில் கிடைத்த தண்டனை போல இறுதியாக மனித இனம் அழியத் தொடங்கும். மனிதர்களின் எண்ணிக்கை குறைவடைய புதிதாய் பிறக்கும் மனிதர்களுக்கு விமானம் தொழிற்சாலை போன்றவை எல்லாம் DNA களின் உதவியால் மட்டுமே தெரியவரும். அப்படி உணரும் மனிதர்கள் வான்மீகி இராமாயணம் எழுதியதுபோல, அகத்தியர் ஏட்டுச் சுவடிகள் எழுதியது போல கற்பனையில் அனைத்தையும் எழுதிவைத்து விட்டுச் செல்வார்கள். அதைத் தொடர்ந்து அதிக தாவரங்கள் வளர, புழு பூச்சி தொடங்கி விலங்குகளும் உருவாக மீண்டும் பிறப்போம் 5000 ஆம் ஆண்டில் மனிதர்களாக.

வாழ்க்கை ஒரு வட்டம்.வட்டத்தின் புள்ளியே,விட்டத்தின் தொடக்கம். 
சிந்தனை சிவவினோபன்

அணுவினுள் ஒரு அகிலம்.

அணுவினுள் ஒரு அகிலம்.

மறையப் போகும் ஒரு சில காலத்தில், உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்லாமல், தான் இருக்கும் துறையில் தன் மறைவின் பின் 20 வருடங்கள் வரை யாராலும் நினைக்கவே முடியாத பல சாதனைகளை நிகழ்த்தி மறைந்த மாபெரும் புத்திசாலி ஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs ) அவர்கள் கூறும் தாரக மந்திரம் மாற்றி யோசி (Think different). ஆனால் இப்போது நான் உங்கள் அனைவருக்கும் சொல்ல உள்ள தாரக மந்திரம் “முதலில் யோசி (Think First)”. ஏனென்றால் இவ்வுலகில் சிந்திக்கவும் செயல்படுத்தவும் ஆயிரம் கோடிக்கு  மேற்பட்ட ரகசியங்கள் ஒளிந்துள்ளது. ஆனால் அதைக் கண்டு வியக்குமளவு ஆற்றல் எம்மிடம் குறைந்து கொண்டே வருகின்றது.

எங்களிடம் ஆறாவது அறிவு உண்டு, பகுத்தறிந்து பல ஞானங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். இன்று ஏழாம் அறிவைப் பற்றிப் பார்க்கப்போகின்றோம். பார்த்ததைக் கொண்டு சிந்தித்து பலதைக் கண்டுபிடிப்பது ஆறமறிவு. பாராமலேயே உணராமலேயே உண்மையை உணரும் ஏழாமறிவைத் தூண்டும் இந்தக் கட்டுரை சற்று குழப்பமானதாக இருப்பதற்கு வாய்ப்புண்டு ஆகவே துல்லியமாக நிறுத்தி நிதானமாக வாசிக்கவும், நானும் எளிமையாக விளங்கப்படுத்த முயல்கின்றேன்.

அணு என்றால் என்ன என்று கேட்டால் எங்கள் மனக்கண்ணில் உடனடியாக ஒரு வட்ட வடிவம் தோன்றும். இன்னும் சற்று உற்றுப் பாரத்தால் அது ஒரு கோளவடிவமாகத் தோன்றும் மற்றும் இலத்திரன்கள் சுற்றிக் கொண்டு இருப்பது போன்று தோன்றும். இவை எல்லாம் நாம் கற்றுக்கொண்ட பள்ளிப்பாடத்தால் உருவாகும் விம்பங்கள். நாம் இதுவரையும் அணுவையும் பார்த்ததில்லை அதைச் சுற்றும் இலத்திரனையும் பார்த்ததில்லை, படித்ததால் மனதில் தோன்றிய ஞானம் அதுவே ஆறாமறிவு. இந்த இலத்திரன் பற்றிய மனத் தோற்றத்தை அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அகிலத்தை எடுத்துக்கொள்வோம், பூமி என்று சொன்னால் உடனடியாக எங்கள் மனதில் ஒரு வட்ட வடிவம் அல்லது கோள வடிவம் தோன்றும், அது சூரியனை மையமாக வைத்து வட்டப் பாதையில் அல்லது நீள்வட்டப் பாதையில் சுற்றுவது போன்று தோன்றும். ஆனால் இதுவரை இந்தக் காட்சியை உங்கள் கண்கள் கண்டதுண்டா? இல்லை. வெறும் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் தான் விஞ்ஞானிகளாலும் நாசாவாலும் வெளியிடப்பட்டுள்ளது அவர்களுக்கு எப்படி அந்த ஞானம் வந்தது அதுவும் ஆறாமறிவு தந்த கொடைதான்.

தமிழில் பல சொற்கள் இருக்கின்றது, உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் “பார்த்தல், கவனித்தல், உற்றுநோக்கல்” இவற்றின் அர்த்தங்கள் எல்லாம் ஒரே செயலைத்தான் குறிக்கின்றது ஆனால் அதன் விளைவுகள் வேறுவிதமானது. விஞ்ஞானிகள் கவனித்து உற்று நோக்கிய படியால் பல விடயங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றது, நாம் அதை பார்த்துப் படிக்கின்றோம் அத்தோடு எம் செயல் முடிந்து விடுகின்றது. அது தான் பார்த்தலுக்கும் உற்று நோக்குதலுக்கும் உள்ள வித்தியாசம். அதனால்த் தான் சொன்னேன் இன்று முதல் நாம் அனைவரும் எம்முடைய தாரக மந்திரமாக “முதலில் யோசி (Think First)” என்பதை உள்வாங்குவோம் என்று. சிந்தித்தால் கண்டுபிடிக்க ஆயிரம் விந்தைகள் அகிலத்திலுண்டு. அதில் ஒன்றுதான் ஒருங்கிசைவு.

ஒருங்கிசைவு என்றால் தோற்றத்தில் ஒரே போல் இருக்காது, முற்றிலும் வேறுபட்டதாகக் கூட இருக்கலாம் ஆனால் அதன் இயல்பும் பெளதீக விளைவும் ஒன்றே போல் இருக்கும். இப்போது முதலில் சொன்னேனல்லவா ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று, ஆம் அந்த அணுவைப் பற்றியும் அதைத் தொடர்ந்து பார்த்த அகிலத்தைப் பற்றியும் யோசியுங்கள். அணுவினுள் இலத்திரன் கருவை மையமாக வைத்து சுற்றுகின்றது. அகிலத்தில் கோள்கள் சூரியனை மையமாக வைத்து சுற்றுகின்றன. அணுவினுள் சக்தி இழப்பு என்பது சக்தி மட்டங்களாக வெளிப்படுகின்றன, அகிலத்தில் கோள்களும் சக்தி வட்டங்களாகத் தான் ஒன்றை விட்டு ஒன்று மிக மிக சிறிய அளவில் விட்டு விலகிக் கொண்டுள்ளன.

இப்போது உங்களுடைய ஏழாம் அறிவைத் தூண்டும் விடயத்தை நான் சொல்லப் போகின்றேன், நுணுக்கமாக உற்றுக் கவனியுங்கள். அணு மிகச் சிறிய ஒன்று அகிலம் மிகப் பெரிய ஒன்று இரண்டையும் எங்கள் கண்கள் சாதாரணமாகப் பார்க்கமுடியாது. இரண்டும் ஒத்திசைந்து போகக்கூடியது என்றால் ஆச்சரியமாக இருக்கும் ஆனால் அதுவே உண்மை. அது எப்படி சாத்தியம் என்றால், நீங்கள் ஒரு செயற்கைக்கோளில் ஏறி விண்வெளிக்குச் சென்றால் அங்கிருந்து பூமியைப் பார்க்கும் போது ஒரு சிறிய பந்து போலவே தெரியும், பூமியில் நடக்கும் மக்களோ அல்லது யானையோ அல்லது திமிங்கலமோ அல்லது அதையும் உள்வாங்கியுள்ள கடலோ எதன் அசைவும் கண்களுக்குத் தெரியாது. கண்ணுக்கு பூமி ஒரு சிறிய பந்து போலத் தெரியும். இப்போது உங்கள் வீட்டில் உள்ள ஒரு சிறிய பந்தை எடுத்துக் கொள்ளுங்கள் இந்தப் பந்து ஏன் ஒரு பூமியாக இருக்கக் கூடாது என்று யோசித்துப் பாருங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ஆம், அணுவை ஒரு அண்டவெளியாக எடுத்துக் கொண்டால் அதற்குள் பல பால் வெளிகள் அந்த பால் வெளியில் பல நட்சத்திரங்கள் அந்த நட்சத்திரத்திற்கு கோள்கள், அதில் ஒரு கோள் பூமி, அந்தப் பூமியில் மக்கள் என்று இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். இதைக் கேட்க சற்று குழப்பமாக இருக்கும் தலை சுற்றும், சில வேளைகளில் முட்டாள்த் தனமாகக் கூட இருக்கும். ஏன் என்றால் நாம் நம்மைத் தாண்டி, புவியைத் தாண்டி செவ்வாய்க்கு கிரகத்தில் ஆராய்ச்சி செய்கின்றோம் ஆனால் எம்முள்ளேயே பல கோடி அகிலங்கள் உருவாகி மறைகின்றதோ என்ற சிந்தனை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். ஆனால் நியூட்டன் புவியீர்ப்பு பற்றி நிறுவும் வரை எங்கள் தலைகளிலும் பல முறை பழங்கள் விழுந்துள்ளது, ஏன் தேங்காய் கூட விழுந்துள்ளது ஆனால் நாம் புவியீர்ப்பைப் பற்றி சிந்திக்கவோ, அதை நிறுவவோ முயலவில்லை. ஆகவே சிந்திக்கத் தொடங்குங்கள், எங்கள் முன்னோர்கள் எத்தனையோ பல ஆற்றலைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அதை தூசிதட்ட, யோசிக்க ஆரம்பியுங்கள்.

கிருஷ்ண பகவான் தன் திருவாயைத் திறந்து அகிலத்திக் காண்பித்தார், சிவன் பிரமாண்ட உருவெடுக்க அவருள் அரக்க குரு அனைத்து அகிலங்களையும் கண்டார் என்ற கற்பனைக் கதைகளுக்கு, யாரோ ஒரு ஆங்கிலேயர் வந்து உயிர் கொடுத்து நிறுவுவதற்கு முன் நாமே சாதிப்போம்.

கற்பனைகள் எல்லாம் விற்பனைக்கு வந்தால்,

சொப்பனத்தின் விலைக்கு உலகில் நிகரேது?

சிந்தனை சிவவினோபன்

பறக்கும் தட்டில் இருக்கும் விஞ்ஞானம்

பறக்கும் தட்டில் இருக்கும் விஞ்ஞானம் 

வாருங்கள் நண்பர்களே இன்று நாம் பறக்கும் தட்டில் ஏறி ஒரு பயணம் செய்வோம். உங்களுக்கு மறக்க முடியாத ஒரு விசித்திர அனுபவத்தைக் கொடுக்கவுள்ள இந்தப் பயணத்திற்கு, விண்வெளியின் விந்தை என்று பெயர்வைப்போம். விண்வெளியின் விந்தைகளில் ஒன்று தான் இந்த பறக்கும் தட்டு. உலகில் விசித்திரமான பல தருணங்கள் உண்டு, வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் விதிமுறைகள் உண்டு ஆங்காங்கே விதிவிலக்காய் உள்ள ஒரு சில பொருட்களில் ஒன்று தான் இந்த பறக்கும் தட்டு.

பொருட்கள் எல்லாம் ஏன் மேலிருந்து கீழே வீழ்கின்றது என்று கேள்வி எழுந்த போது பூமிக்கு புவியீர்ப்பு விசையுண்டு என்று கற்றுக் கொண்டான் மனிதன். அந்தப் புயீர்ப்பை எதிர்த்து விசை கொடுத்தால் பறக்கலாம் என்று மனிதன் கண்டுபிடித்தான். ஆனால் இந்தக் கண்டு பிடிப்பிற்க்கெல்லாம் ஒரு முன்னோடி தான் இந்த பறக்கும் தட்டு. மனிதன் பறவையைப் பார்த்து விமானம் கண்டுபிடித்தான் என்று நாம் அனைவரும் எண்ணிக்கொண்டு இருக்கின்றோம் ஆனால், மனிதன் பறவையைய் பார்த்து பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுடன், அதற்காக கைகளில் இறக்கையை இணைத்து மலைகளில் இருந்து குதித்து முயன்று மடிந்தான். அப்படி இருக்கும் போதுதான் அவன் கண்களுக்கு பறக்கும் தட்டுக்கள் தெரிந்துள்ளது. இதற்கான ஆதாரங்களாக பல குகை ஓவியங்கள் உண்டு.

இன்று விமானம் உருவாக்குவதற்கு முக்கிய அடிப்படையே பறக்கும் தட்டுக்கள் தான். ஒரு வாகனத்தை உருவாக்கி அதற்குள் அமர்ந்து கொண்டு அந்த வாகனத்தைப் பறக்க வைக்க முடியும் என்று அறிவியலைக் கொடுத்தது இந்தப் பறக்கும் தட்டுக்கள் தான். இன்று விமானம் பறக்க வேண்டும் என்றால், ஓடுதளத்தில் வேகமாக ஓடவேண்டும் அவ்வாறு ஓடி தன் பாரத்திற்கு சமமான வளித்துணிக்கையின் அழுத்தத்தைப் உருவாக்கும் போது வானில் பறக்கும் நிலையை உருவாக்கிக் கொள்ளலாம். அல்லாவிட்டால் உலங்கு வானூர்தி(Helicopter) தன்னுடைய இயங்கும் இறக்கைகளால் சுற்றியுள்ள வளித்துணிக்கைகளை இழுத்து கீழ்நோக்கு அழுத்தும் போது ஏற்படும் அழுத்தத்தால் தன்னுடைய பாரத்தை பூச்சியம் ஆக்கி வளிமண்டலத்தில் மிதக்கும் தன்மையை உருவாக்கி அதன் பின் இரண்டாவது இறக்கையைப் பயன்படுத்தி பயணிக்க ஆரம்பிக்கின்றது. இவையெல்லாம் மனிதன் கண்டுபிடித்த பறக்கும் சாதனங்களில் உள்ள விஞ்ஞானம் ஆனால் பறக்கும் தட்டில் இதெல்லாம் கிடையாது. பறக்கும்தட்டுக்கள் ஓடுதளத்தில் ஓடி எழுந்து பறப்பதில்லை, பறக்கும் தட்டில் மின்விசிறிகளும் இல்லை. அது ஒரு மூடிய கோளம் போன்றது. அதுவும் முழுமையான கோளம் அல்ல. இரண்டு சாப்பாட்டுக்கு கோப்பைகளை இணைத்தால் ஒரு உருவம் ஏற்படுமே அது போன்ற அமைப்பில் இருக்கும் ஒரு பறக்கும் சாதனமே பறக்கும் தட்டு.

இந்தப் பறக்கும் தட்டு எப்படிப் பறக்கின்றது என்ற ஆராய்ச்சியில் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தத் தொழில்நுட்பம் மட்டும் கைகூடினால், மனிதன் செலவில்லாமல் பயணத்தை மேற்க்கொள்ளும் தருணம் உருவாகும். அதற்க்கு பறக்கும் தட்டை யார் உருவாக்கினார்கள்? எங்கிருந்து வருகின்றது? என்ற அறிவியலைக் கண்டு பிடிக்க வேண்டும். பறக்கும் தட்டு என்றவுடனேயே அடுத்த நொடி நினைவிற்கு வருவது வேற்றுகிரக வாசிகள். ஸ்டீபன் ஹக்கிங்ஸ் (Stephen Hawking) உட்பட பல விஞ்ஞானிகளின் எதிர்வுகூறலின் படி பூமியில் உள்ள மனிதர்களை விட பல மடங்கி அறிவியலில் சிறந்த வேற்றுகிரக வாசிகள் அவ்வப்போது பூமி வந்து செல்கின்றார்கள் என்பது ஆங்காங்கே தகவலாகக் கசிந்தாலும். இதுவரை எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப் படவில்லை.

1911 இல் காந்தவியல் மட்டும் கதிர்வீச்சுப் பற்றி ஆராய்ச்சி செய்த டெஸ்லா என்ற விஞ்ஞானி ஒரு பறக்கும் சாதனத்தை வடிவமைக்கின்றார் அது அச்சசல் பறக்கும் தட்டுப் போலவே இருக்கின்றது. அந்த அறிவியலை மேற்கொண்டு விரிவாக வடிவமைக்க அனுமதி மறுக்கப்பட்டு அவரின் கண்டு பிடிப்புக்களை முடக்கவும் செய்தாரகள் அக்காலத்தைச் சேர்ந்த அரசியல் ஞானிகள். இப்போது பறக்கும் தட்டு என்றால் என்ன அது எப்படி உருவாகி இருக்கும் என்று ஒரு விரிவான பார்வையை யோசிப்போம் வாருங்கள்.

எம் உலகம் எண்ணுக்கடங்காக கால வயதைக் கொண்டது அதில் மனிதர்கள் நாம் இப்போது அறிவுஞானம் பெற்று, சில ஆயிரம் வருடங்களைத் தான் ஊகித்துக் கண்டு பிடித்து வைத்துள்ளோம். ஆகவே இராட்சத உயிரினங்கள்(டைனோசர்) வாழ்ந்த காலத்தில் என்ன நடந்தது அதற்கு முன் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள முடியாத சோக நிலையில் உள்ளோம். இவற்றை மனிதன் வாழ்ந்த குகை ஓவியங்கள் எஞ்சியுள்ள எச்சக் கூறுகளின் உதவியுடன் கற்பனை வடிவமாக கணித்து வருகின்றோம். உதாரணத்திற்கு இப்படி யோசித்துப் பாருங்கள் ஒரு 10 பேர் கொண்ட குழு விண்வெளிக்குச் செல்கின்றது சென்ற அனைவரும் மிகப் பெரும் அறிவியல் மேதைகள். அவர்கள் சென்ற அந்தக் கால கட்டத்தில் உலகில் மாபெரும் அழிவு ஏற்பட்டு உலகமே அழிந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம், ஒரு 10 வருட காலம் கழித்து கடின முயற்ச்சியின் பயனாக மீண்டும் பூமிக்கு வருகின்றார்கள் ஆனால் பூமியில் அனைவரும் அழிந்து விட்டார்கள். ஒரு சில காட்டுவாசிகள் தான் எஞ்சியுள்ளார்கள் என்றால், அவ்வாறு எஞ்சியுள்ள காட்டுவாசிகளுக்கு விண்ணில் இருந்து வந்தவர்களை பார்க்கும் பொது ஆச்சரியமாக இருக்கும் அவர்களை ஓவியமாகத் தீட்டி வைப்பார்கள். விண்வெளி ஆராய்ச்சி முடித்து மீண்டும் பூமி திரும்பிய அந்த விஞ்ஞானிகளுக்கு அறிவியல் ஞானம் இருந்தாலும் அதை செயல்படுத்த போதிய உலோகங்கள் மட்டும் சாதனைகள் இல்லாததால் தங்கள் விஞ்ஞானக் குறிப்புக்களை வாய்வழியாகவும் புத்தகங்களாகவும் எழுதி வைப்பார்கள். கால ஒட்டத்தில் 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்குப் பின் வரும் தலைமுறைகள் அதை ஆதாரமாக வைத்து கண்டு பிடிப்புக்களை செய்யும். இப்போது புரிகின்றதா எப்படி பறக்கும் தட்டுக்கள் உருவாகியிருக்கும் என்று? இவை அனைத்தும் எம் முன்னோரின் கண்டுபிடிப்புக்களாக இருப்பதற்கு பல வாய்ப்புக்கள் உண்டு ஆகவே எம்முடைய பழமையை நாம் மறக்காமல் மறைக்காமல் தேடிக் கற்றுக்கொள்ள வேண்டும்.

முன்னோரின் விஞ்ஞானத்தை முயன்று கற்றுக்கொள்வோம்.சிந்தனை சிவவினோபன்

Why April Fool? Why April 1st?


எதற்காக இந்த முட்டாள்கள் தினம் என்று சிந்திப்பவர்கள் தான் புத்திசாலி, அப்படிச் சிந்தித்து மற்றவர்களை முட்டாள்களாக்குவதை விட நாம் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று எப்போது எண்ணத் தொடங்குகின்றோமோ அன்று நாம் அனைவரும் அதி புத்திசாலி ஆகிவிடுவோம்.

இல்லாவிட்டால் நாம் 10 பேரை முட்டாள்கள் ஆக்கும் அதே நேரம் எம்மை 1000 பேர் முட்டாளக்கிவிட்டுச் சென்று விடுவார்கள். ஆனாலும் என் இந்த முட்டாள்கள் தினம் உருவானது என்ற கதை ஒரு சுவாரசிக்கமான கதை தான். வாருங்கள் அந்தக் கதையைப் பார்ப்போம்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் நாள்காட்டியில் ஏற்படுத்திய மாற்றமே ஆகும். அதாவது முன்பிருந்த நாள்காட்டியில் April மாதம் முதலாம் திகதி தான் வருடப் பிறப்பு என்று ஒரு முறையை அறிமுகப் படுத்தினார்கள். இன்று கூட தமிழ் நாள்கட்டியில் April 14 அல்லது 15 நாள் அதாவது தமிழுக்கு சித்திரை வரும் முதலாம் திகதி வருடப்பிறப்பு என்று கொண்டாடுவோம் தெரியும் தானே. அதே போன்று கொண்டாடினார்கள் ஒரு குழுவினர்கள். ஆனால் இன்னுமொரு குழுவினர்கள் அதைத் தவறு என்று சொல்லி தை மாதம் முதலாம் திகதி தான் வருடப் பிறப்பு என்றனர். அதனால் இரண்டு குழுவினருக்குள்ளும் பிரச்சனை மூண்டது அதன் விளைவாக இந்தப் பிரச்னையை முடித்து வைக்க, ஒரு வருடத்தில் இரண்டு வருடப் பிறப்பைக் கொண்டாடத் தொடங்குவோம் என்று முடிவுக்கு வந்தனர். அதே போல் அனைவரும் தை மாதம் முதலாம் திகதி ஒற்றுமையாக வருடப் பிறப்பை கொண்டாடினர். அதன் பின் சித்திரை முதலாம் திகதி வந்தது. அந்த நாளை வருடப் பிறப்பாக கொண்டாடுவோம் என்று இரண்டு குழுவினரும் முடிவெடுத்து ஒரு பகுதியில் கொண்டாட இடத்தை ஏற்படு செய்து ஒன்று கூடுவோம் என்று கூறிவிட்டு பங்குனி 31 ஆம் திகதி எதிராளிக்கு குழுவினர்கள் அந்த பகுதிக்கே வராமல் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து விட்ட்னர்.

இதனால் கொண்டாடுவோம் என்று வந்த குழுவினர்கள் ஏமாந்து பொன்னார், சோகமாக வீடு திரும்பியபோது அவர்களை பார்த்தவர்கள் எல்லாம் நீங்க முட்டாள்கள் ஆகிவிடதீர்கள் என்று சொல்ல, அதுவே காலப் போக்கில் சித்திரை 1 ஆம் திகதி முட்டாள்கள் தினம் ஆனது. ஒரு இனத்தை அவமானப் படுத்தும் இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமளிக்கும் நாளா என்று நினைத்துப் பாருங்கள். வருகின்ற வருடம் கொண்டாட வேண்டுமா என்று சிந்தியுங்கள்

உங்கள் மனதில நல்லதை விதைத்த இந்த விம்பத்தை உங்கள் விம்பமாக எண்ணி உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.
நன்றி வணக்கம்.