” LiDAR ” இதென்னடா புதுசா இருக்கே என்று நினைத்தால். கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுகின்ற இன்னொரு சொல் உங்களிற்குத் தெரியுமா என்று பாருங்கள்!
றேடார் (RaDAR) என்று கேள்விப்பட்டதுண்டா? கப்பல் றேடாறில் (RaDAR) மாட்டுப்பட்டது என்று சொல்லக் கேட்டிருப்போமே! அந்த றேடார் (RaDAR) உடைய இன்னொரு வடிவம் தான் இந்த LiDAR.
RaDAR என்பதன் விரிவாக்கம், Radio Detection And Ranging. அதாவது ராடியோக் கதிர்களை ஒரு டோச் லைட் போல அடிக்க வேண்டும். அந்த ராடியோக் கதிர்கள் எதிரில் உள்ள பொருளில் பட்டுத் தெறித்துத் திரும்பி வரும். அவ்வாறு வரும் கதிர்களின் எண்னிக்கை மற்றும் நேரத்தை கணித்து எமக்கு எதிரில் உள்ள பொருள் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதைக் கணிக்கும் முறையே றேடார் (RaDAR) ஆகும்.
இங்கு LiDAR என்பதன் விரிவாக்கம், Light Detection And Ranging ஆகும். அதாவது ஒளிக்கதிர்களை டோச் அடிப்பதைப் போல அடித்தால் அந்தக் கதிர்களும் தெறிக்கும் அவ்வாறு தெறிக்கும் கதிர்களையும் நாம் கணிக்க முடியும் அதன் மூலம் இரவிலும் ஒரு பொருளின் தூரம் மற்றும் அதன் ஒளியின் நிறம் என்பவற்றை அதன் செறிவைப் பயன்படுத்திக் கணிக்க முடியும் என்று நான் இரண்டு வருடங்களிற்கு முன் ஒரு கட்டுரையில் எழுதி இருந்தேன். அந்தக் கண்டு பிடிப்பின் பெயரைக் கூட கரு ஒளிக் கமெரா என்று பெயரிட்டிருந்தேன். அதுவே இந்த LiDAR தொழிநுட்பம் இப்போது 2020 இல் கைத்தொலைபேசியிலேயே தன் வித்தையைக் காட்டுகிறது.
இளையதளபதி விஜய் அவர்களுடைய 64வது படத்தின் பெயர் நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாஸ்டர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது இந்த கட்டுரையின் மூலமாக மாஸ்டர் என்றால் யார்? நீங்களும் மாஸ்டராக மாற முடியுமா? இளைய தளபதி விஜய் அவர்கள் உண்மையிலேயே ஒரு மாஸ்டரா! என்ற 3 கண்ணோட்டத்தில் இந்தக் கட்டுரை அமைய இருக்கின்றது வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
மாஸ்டர் என்றால் ஒரு துறையில் அறிவும் திறமையும் கொண்டவர் என்று அர்த்தம். தமிழில் கூற வேண்டுமென்றால் வாத்தியார் என்று கூறலாம். நீங்கள் இருக்கும் துறையில் அல்லது, உங்கள் இலட்சியமாக இருக்கின்ற துறையில் நீங்கள் மாஸ்டர் ஆக வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்?
1)முதலில் அந்தத் துறையை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். 2)இரண்டாவதாக அந்தத்துறையில் சாதித்த. சாதித்துக் கொண்டிருக்கின்ற ஒருவரை குருவாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். 3)மூன்றாவதாக அவரை குருவாக ஏற்றுக் கொண்டதன் பின்பாக அவருடைய கொள்கைகளை வழிகாட்டல்களை சரியோ? தவறோ? என்று ஆராயாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான்காவதாக நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் உங்களுக்கென்று கொள்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஐந்தாவதாக உங்கள் கொள்கைகள் சரியாக இருக்கின்றதா? என்று பிறர் கூறுகின்ற கருத்தை வைத்து நீங்கள் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆறாவதாக சரி பார்த்து அதன் பின்பாக அந்த கொள்கையிலிருந்து எந்த காலகட்டத்திலும் மாறுபடாமல் இருக்கவேண்டும். ஏழாவதாக இப்போது நீங்கள் குருவாக ஏற்றுக்கொண்ட அவருடைய கொள்கையும் உங்களுடைய கொள்கையும் ஒத்துப்போகின்றன அல்லது வேறுபடுகின்றது என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். எட்டாவதாக இரண்டு கொள்கைகளையும் வைத்துக்கொண்டு அதிலிருந்து திருத்தமான ஒரு முழுமையான இறுதிக் கொள்கையை உருவாக்க வேண்டும். ஒன்பதாவதாக அந்த இறுதிக் கொள்கையிலிருந்து எவர் கூறினாலும் எந்த கால கட்டத்திலும் எந்த காரணத்திற்காகவும் விலகாமல் இருப்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். பத்தாவதாக உங்களுடைய கொள்கைகளை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இப்படி செய்தீர்கள் என்றால் நீங்களும் மாஸ்டர் ஆகலாம். அதாவது வாத்தியார் ஆகலாம். இப்போது இளைய தளபதி விஜய் அவர்கள் ஒரு வாத்தியாரா? என்று பார்ப்போம்.
சினிமாத்துறைக்கு வரும்பொழுது எதுவும் தெரியாமல் வந்தார். அவருடைய தந்தையைக் குருவாக ஏற்றுக்கொண்டு, தந்தை சொல்லிய அனைத்தையும் சரியா? தவறா? என்று பிரித்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டார். அதன்பின் தனக்கென்று ஒரு கொள்கையை உருவாக்கினார். இரண்டு கொள்கைகளையும் வைத்து மூன்றாவதாக அரசியல் வேண்டுமா? வேண்டாமா? என்று இப்போது சிந்தித்து மூன்றாவது கொள்கையை உருவாக்குகின்ற நிலையில் இருக்கின்றார். ஆகவே மாஸ்டர் ஆகுவதற்கு தகுதி உடையவராக இளையதளபதி விஜய் அவர்கள் இருக்கின்றார் அதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்.
நீங்களும் மாஸ்டர் ஆக வேண்டுமென்றால் இந்த படிக்கட்டின் படி ஒவ்வொன்றாக செய்து பயணித்திருந்தால் நீங்களும் மாஸ்டர் ஆக முடியும் நன்றி வணக்கம் .
2020இல் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் 2020 ஒரு அதிசய வருடம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆம் இந்த வருடம் 1010 வருடங்களுக்கு ஒரு முறை வருகின்ற ஒரு அதிசய வருடம். இதே போன்று ஒரு வருடம் முதலாவதாக 1010இல் வந்தது. இப்பொழுது 2020ல் வந்திருக்கின்றது. அடுத்து 3030 இல் தான் வரும்இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்றால்
சிறப்பு மட்டுமல்ல ஒரு ஆபத்தும் தங்கியிருக்கின்றது என்ன ஆபத்து என்றால் நாம் ஒரு திகதியை எழுதும் பொழுது சுருக்கமாக எழுத வேண்டும் என்பதற்காக முதலில் மாத நாளையும் அடுத்ததாக இந்த மாதம் என்பதையும் மூன்றாவதாக வருடத்தைக் எழுதும்பொழுது வருடத்தில் முழுமையாக எழுதாமல் இறுதியாக இருக்கின்ற இரண்டு இலக்கத்தை மட்டும் எழுதுவோம் உதாரணத்திற்கு நான்காம் திகதி இரண்டாம் மாதம் 2019 என்பதை 04.02.19 என்று சுருக்கமாக எழுதுவது வழக்கம் ஆனால் அதே போன்று இந்த வருடத்துக்கு 2020 க்கு எழுத முடியாது
காரணம் என்னவென்றால் நீங்கள் சுருக்கமாக எழுதும்பொழுது 20 என்று எழுதுகிறீர்கள் அப்படி 20 என்று எழுதினால், உதாரணமாக 01.01.20 என்று எழுதினால் , யாராவது அந்த 20 என்பதற்குப் பின்னால் 19 அல்லது 14 அல்லது 15 என்ற இலக்கத்தை இணைத்து விட்டால் அது வேறு ஒரு வருடமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ( 01.01.2019 என்று மாறிவிடும்.)
ஆகவே நீங்கள் எழுதும் பொழுது கவனமாக இருங்கள் இந்த வருடத்தை நீங்கள் எழுதும் பொழுது சுருக்கமாக எழுதாமல் முழுமையாக 2020 என்று எழுதுவதே பாதுகாப்பான விடயமாக இருக்கும் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன் இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் இதை பலருக்கும் பகிர்ந்து அனைவருக்கும் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
அறம் என்று அன்று படம் ஒன்று வந்தது. இன்று அதே நிலையில் நியம் இங்கு நிகழ்ந்தது. இரண்டு வயது குழந்தைக்கு இயற்கை செய்த கொடுமையா? இல்லை இந்த அரசாங்கம் காட்டிய அலட்சியமா?
இரண்டே வயதாகும் சுர்ஜித் என்ற குழந்தை, இந்தியாவில் திருச்சியில் நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் 25.10.2019 வெள்ளிக்கிழமை ஓடிவிளையாடும் போது ஏற்பட்ட ஓர் உச்சக்கட்ட அபாயம் தான் இது. தந்தை செய்த தவறில் மாட்டிக்கொண்ட தனையன் என்பது சுர்ஜித் விடையத்தில் உண்மையாகின்றது.
மூன்று நாட்களாக(27.10.2019 இன்று மதியம் 2 மணி வரை) அந்தக் குழந்தை 25 அடியில் இருந்து சிறிது சிறிதாக நழுவி உள்ளே இறங்கி கொண்டு உள்ளது. இப்போது வரை அனைத்து வழிகளையும் முயற்சித்துப் போராடிக் கொண்டு இருக்கும் தீயணைப்புப் படை, மற்றும் ஒட்டு மொத்த இந்தியாவும் நம்பிக்கை மற்றும் பிராத்தனையைக் கைவிடவில்லை. நீங்களும் உங்கள் ஒரு பிராத்தனையை அந்தக் குழந்தைக்கு கொடுங்கள். இனிமேல் எந்த ஒரு சுர்ஜித்திற்கும் இந்த ஒரு நிலை ஏற்படக் கூடாது. அதற்காய்ப் பிராதியுங்கள். ஆனால் நடந்தது என்ன?
மழை பொய்த்து போன மண்ணில், விவசாயித் தந்தை போட்ட துளைதான் அந்த ஆழ்துளைக் கிணறு. துளை போட்டும் நீரில்லாக் காரணத்தால் அதை மூடுவதற்கு இன்னும் ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டுமா? என்று எண்ணிய தந்தை கல்லையும் மண்ணையும் போட்டு கவனயீனமாக மூடியது முதல்க் குற்றம். கிணறு சரியாக மூடப்பட்டதா? என்று கவனிக்காத அரசாங்க அதிகாரிகள் இரண்டாம் குற்றவாளிகள். விழுந்த குழந்தையைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருந்த மத்திய அரசாங்கம் மூன்றாம் குற்றவாளி. ஆனால் இப்போது அந்தத் துளையில் இருந்து 3 மீட்டரை அருகில் இன்னுமோர் துளை போடப்படுகின்றது அதன் வழியாக உள்ளே சென்று 4 இஞ்சித் துளையில் சிக்கி வெளியில் வரமுடியாமல் அலறும் குழந்தைக்கு அருகாமையில் துளையிட்டுச் சென்று காப்பாற்ற முயலும் குழுவிற்கு எங்கள் பிரார்த்தனையையும் கொடுத்து காப்பாற்ற வழிபடுவோம். இந்தத் தகவலை உடனடியாக அனைவரோடும் பகிர்ந்து நம்பிக்கையை அதிகரிப்போம். நாளை இன்னோர் குழந்தை இன்னலில் அவதிப்படக் கூடாது என்றால், பேசுங்கள் தயவு செய்து இந்தத் தகவலைப் பகிர்ந்து, பலரோடு பேசுங்கள். பேசி நன்மையை எதிர்பார்ப்போம்.
விண்வெளி என்பது, அன்னையின் மடியில் படுத்து அம்புலி பார்த்த காலம் முதல் அனைவரின் மனதிலும் ஒரு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும் இன்பமான இடம் தான் இந்த விண்வெளி. ஆனால் இந்த விண்வெளியில் ஒரு ஆச்சரியமான புதுமை ஒன்று ஏற்படவுள்ளது, என்று சொன்னாலே நம்புவீர்களா? மனிதன் 1600 ஆம் ஆண்டுகளில் விண்ணைப் பார்த்தான், விண்ணில் மின்னும் பொருட்கள், மின்னாப் பொருட்கள் இருப்பதைக் கண்டான், ஆராய்ந்தான். மின்னும் பொருட்கள் நட்சத்திரம், மின்னாப் பொருட்கள் கோள்கள் என்று கண்டறிந்தான்.
2000 ஆண்டுகளில் நான் விண்ணைப் பார்த்தேன் மின்னும் பொருட்கள் மின்னாப் பொருட்கள் கண்டேன். மின்னாப் பொருட்கள் கோள்கள், மின்னும் பொருட்கள் நட்சத்திரம் அல்லது செய்மதி என்று கற்றுக் கொண்டேன். ஆனால் 3000 ஆண்டுகளில் வானில் இன்னுமொரு பொருள் மிகையாக அதிகரிக்கவுள்ளது. அதாவது 3000க்குப் பின் உள்ள குழந்தைகள் விண்ணைப் பார்க்கும் போது விண்ணில் மின்னும் பொருட்கள், மின்னாப் பொருட்கள் இருக்கும். அவை எவை என்று ஆராய்ந்தால் மின்னும் பொருட்கள் நட்சத்திரமும், செய்மதியும். மின்னாப் பொருட்கள் கோள்களும் குவள் உலகமும் ஆகும். அது என்ன குவள் உலகம்? இதோ ஒரு புதிய பயணத்திற்குத் தயாராகுங்கள்.
மனிதன் அறிவில் விருத்தி கண்டு வருகின்றான். அதே நேரம் உயிர்வாழும் காலத்தையும் அதிகரித்து வருகின்றான். இவை இரண்டும் இயற்கைக்கு சற்று முரண்பாடாகும் வேளையில், இயற்கை சமநிலையைத் தேடி, இயற்கை அனர்த்தங்களை உண்டுபண்ணி மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றது. இதை எதிர்வுகொள்ளவே மனிதன் வேறு கிரகங்களிற்குச் சென்று வாழலாமா என்று சிந்தித்து செயல்பட்டும் வருகின்றான். ஆனால் ஒவ்வொரு கோள்களிலும் ஒவ்வொரு குறைபாடுள்ளது. பூமியில் வாழ்ந்து பழகிய மனிதனிற்கு பிற கோள்கள் குறையாக உள்ளது. இதை நிவர்த்தி செய்ய ஒரு புதிய முயற்சி செய்யவுள்ளான். எப்படித் தெரியுமா?
வளமான மண்ணில்லா நாடுகள் கடலில் கப்பல் விட்டு அதிலே வளமான மண்ணை பிற நாட்டில் இருந்து பெற்று விவசாயம் செய்து வருவது எத்தனை பெருக்குத் தெரியும்? பாலை வன நாடுகள், அணு குண்டு துளைத்த ஆசிய நாடு என்று பல நாடுகள் இந்த கடல் மேல் விவசாயம் செய்துவருகின்றது. இதேபோலத் தான் பூமி போன்றே உருளை வடிவில் பெரிய குவளை செய்து அதை சிறிது சிறிதாக பகுதி பகுதியாக விண்ணுக்கு அனுப்பி விண்ணில் ஒரு குவளை உலகை உருவாக்கி, அதை குவள் வீடு (Galaxy Orb House) என்று அழைப்பார்கள். உலகில் நாம் உலகிற்கு வெளியில் நடப்பது போல, அந்த குவள் உலகில் உலகிற்கு உள்ளே நாங்கள், மரம் வளர்த்து வீடு கட்டி வாழ்வோம். அதிலே பண முதலைகள் தங்கள் பரம்பரையை பரப்பவுள்ளது. இதைக் கேட்கும் போது, பார்த்தியா வெள்ளைக் காரனின் அறிவின் விருத்தி! தமிழரால் இதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று சொல்லும் நபர்களிற்கு ஒரு சிறிய அறிவிப்பு.
எம் தமிழ் வரலாற்றில் விசுவாமித்திரர் என்ற முனிவர் திரிசங்கு என்ற அரசனிற்காக பூமிக்கு வெளியில் அந்தரத்தில் மிதக்கும் தனி சொர்க்க இராச்சியத்தையே செய்து கொடுத்தார் என்ற வரலாற்றை. எடுத்துக் காட்டினால். இன்று விஞ்ஞானிகள் செய்யும் கண்டுபிடிப்புக்கள் ஒன்றும் பெரிதல்ல மற்றும் புதிதல்ல என்று ஆதாரபூர்வமாக கூறலாம்.
எதிர்காலம் என்றோ அகழ்வாகும். – அன்றும், நிகழ்காலம் ஒன்றே இடைக்கூறும்.
வெள்ளை உடையில் புள்ளி மானாகத் துள்ளி ஓடினாள் பள்ளிக்கு செல்லும் இளம் பருவ சிட்டு இளவரசி. பெயருக்கு ஏற்ற இளவரசியாகத்தான் திகழ்ந்தாள் அவள். சிவந்த நிறமும் மெலிந்த தோற்றம் கொண்ட அவள் அழகுதான். தான் என்ற அகங்காரம் அவளுக்குண்டு. அழகு மட்டுமல்ல அறிவாளியும் கூட. கொஞ்சம் திமிரும் கொண்ட அவள் யாருடனும் அதிகம் கதைக்க மாட்டாள். அதனால் தலைக்கனம் பிடித்த பெண் என்னும் பெயரும் அவளுக்குண்டு. பெண்கள் பாடசாலையில் படிக்கும் அவளுக்கு ஆண்களிடம் பழகும் சந்தர்ப்பங்கள் குறைவுதான்.
உயர்தர வகுப்பில் படிக்க ஆரம்பித்த பின் மாலை நேர வகுப்பிற்கு தனியார் பாடசாலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள் படிப்பில் கெட்டிக்காரி. அவள் மருத்துவத் துறையை தெரிவு செய்திருந்தால் அங்கு தான் அவளுக்கு ஆண்களின் தொல்லைகள் ஆரம்பித்தன அவள் யாரையும் கணக்கெடுக்கவில்லை படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால்
திரும்பத்திரும்ப அவளுக்குத் தொல்லை கொடுத்த ஆண்களிடம் அவள் சாதுர்யமாகப் பேசி விலகிக் கொண்டால் ஆனால் மோகன்ராஜ் என்னும் பையன் அவன் தொடர்ந்தபடி இருந்தான் தான் அவளை காதலிப்பதாகவும் தன்னை காதலிக்கும் படியும் வற்புறுத்தினான்.
அவன் ஒரு பணக்கார வீட்டுப் பையன் எப்பொழுதும் ஒரு நண்பர் வட்டாரம் அவனை சுற்றி இருக்கும் சிகரெட் பிடிக்கும் பழக்கமும் அந்த நண்பன் கூட்டத்தில் இருந்தது தண்ணியடிக்கும் பழக்கம் கூட அவர்களிடம் இருப்பதாக அவர்களின் ஆசிரியர் கண்டதையும் அவள் அறிவாள்
எவ்வளவுதான் அவள் விலகிச் சென்றாலும் மோகன்ராஜ் விடுவதாயில்லை காதல் கடிதம் கொடுக்க ஆரம்பித்தான் இளவரசி கடிதத்தை வாசிக்காமல் அவர்கள் முன்னிலையிலேயே கிழித்துப் போட்டு விட்டாள். மோகன்ராஜ் ஆத்திரப் பட்டான் சம்மதம் சொல்லி விடு இல்லாவிட்டால் உயிருடன் இருக்க மாட்டாய் என வெருட்டத் தொடங்கி விட்டான்
என்னடா செய்வாய் என கேள்வி கேட்டு மடக்கினால் இளவரசி கோபம் தலைக்கேற மோகன்ராஜ் மெதுவாக சிரித்தான் பயந்துவிட்டான் என இளவரசி எண்ணினாள். மருத்துவத் துறைக்கான புதுமுக பரிட்சை நெருங்கிவிட்டது இளவரசி மனதை அமைதியாக்கி கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினாள். மோகன்ராஜ் தொல்லையுமற்ற இந்த நிலையில் அவள் நன்றாகப் படித்து பரிட்சை எழுத ஆயத்தமானாள்
அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது மாலை ஆறு மணி போல் அவள் துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது யாரோ அழைப்பது கேட்டு திரும்பிப் பார்த்தால் ஐயோ என அலறினாள் முகம் எல்லாம் எரிந்து அவளது நெஞ்சுப் பகுதியும் எரிந்தது, அவள் அலறி துடித்தாள் சத்தம் கேட்டு அங்கு கூடிய மக்கள் உடனடியாக அவளை வைத்தியசாலையில் சேர்த்தனர்
அமில வீச்சுக்கு இலக்காகி அவள் மூன்று மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினாள்
அவளது முகத்தில் தழும்புகள் இல்லாத போதும் கழுத்துப் பகுதியும் நெஞ்சுப் பகுதியும் கூடுதலாக பாதிக்கப்பட்டிருந்தது மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு உடலில் மாற்று பகுதிகளிலிருந்து சதை எடுத்து ஒட்டித்தான் சரிபடுத்த முடிந்தது அப்படியிருந்தும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அவருடைய மார்பு பகுதியில் ஏற்பட்ட உட்சேதங்களால் பால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவளுடைய குழந்தைக்குக் கூட பாலூட்ட முடியவில்லை
குற்றம் செய்தவனை உடனடியாக காவல்துறை பிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டது தான் ஆனால் பாதிக்கப்பட்ட இளவரசி ஆயுள் முழுக்க தண்டனை அனுபவிக்கின்றாலே?
காதலை ஏற்க மறுத்ததற்காக இத் தண்டனையா? இது நியாயமாகுமா?
மனிதன் உயிர் வாழ காற்று அவசியமானது, ஆனால் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு மனிதனால் உயிர்வாழ முடியாது. சுவாசத்திற்கு உதவும் காற்றானது உணவையும் தந்து விட்டால் நல்லது தானே அதுமுடியுமா? முடியும் என்கிறார்கள் பின்லாந்தை சேர்ந்த “சோலார் புட்ஸ்”( Solar Foods).
காற்றிலேயே மாசாகவே கணிக்கப்படும் CO2 காபனீரொட்சைட்டு வாயுவை, சூரிய மின்சாரம் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு ‘சோலெய்ன்’ என்னும் பெயருடைய சத்துமாவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது சோலார் புட்ஸ்.
தானியங்களை சேர்த்து செய்யும் சத்து மாக்களில் இருக்கும் சுவை, புரதம் கார்போஹைட்ரேட் மற்றும் சிறிது கொழுப்பும் சேர்ந்த சோலெய்ன் புரதமாவைக், காற்று மாசில் இருந்து சோலார் புட்ஸ் தயாரிக்கின்றது.
ஒரு கிலோ சோலெய்ன் தயாரிக்க எரிபொருள் செலவு குறைவு, ஒரு கிலோ சோயாவை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீர் தேவை ஆனால் சோலெய்னிற்கு வெறும் 10 லிட்டர் தண்ணீரே போதும். பருவ நிலை மாற்றத்தினால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உணவிற்கும் பஞ்சம் ஏற்படாமல், மனிதனுக்கு சத்துணவு மாவாக சோலெய்ன் மாவை விற்பனை செய்யலாம் என சோலார் புட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முன்னைய காலங்களில் முனிவர்களும் யோகிகளும் காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு உணவு இன்றி நிஷ்டையில் இருந்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகள் காற்றிலிருந்து தமக்கான உணவையும் நீரையும் எடுத்துக் கொள்கின்றன என்றும் சொல்லப்படுகின்றது. இதுபோன்று இப்போதய விஞ்ஞானிகளும் அதே காற்றில் இருந்து நேரடியாக உணவை தயாரிக்க தொடங்குகின்றார்கள்.
காற்றின் கழிவில் உணவு இருக்கின்றது, மனிதனின் கழிவாக கணிக்கப்படும் சிறுநீரில் நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம் போன்ற சரிவான பொருட்கள் உள்ளன, இவற்றை தாவரத்திற்கான உரமாக மாற்ற முடியும் என்கின்றது அறிவியல். ஐரோப்பிய கடல் கண்காணிப்பு அமைப்பு(E.O.O.S) சுவிஸ்லாந்து நீர் ஆராய்ச்சி நிலையம் (E.A.W.A.S) குளியலறை கலன்களைத் தயாரிக்கும் லாபென் ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக ஆராய்ந்தன கழிப்பிடங்களிலிருந்து சிறுநீரை பிரித்து எடுத்து, கிருமிகளின்றி சுத்திகரித்து, சுத்தமான உரமாக உருவாக்கினர். இந்த உரத்திற்கு “ஆரின” எனப் பெயரிட்டுள்ளனர்.
ஆரின் உரத்தை எல்லா வகை செடிகளிற்கும் போடலாம், என சுவிஸ் வேளாண்மை துறை சான்று வழங்கியுள்ளது. பொதுக் கழிப்பிடங்களில் உரத்தொழிற்சாலை உருவாக்கும் இத் திட்டம் நல்லதுதானே!
கண்ணுக்குப் புலப்படாத உயிருள்ளவரை மனித வாழ்வு உடல் இயக்கம் உள்ளதாக இருக்கும். மின்சாரம் மின் கம்பிகளில் ஓடுவதை போல உடலில் உயிர் ஓடிக்கொண்டு இருக்கின்றது. மின்னோட்டத்தின் தடையோ மாற்றமும் ஏற்பட்டால் அந்தக் கருவி பழுதாகிவிடும் இதைப்போலவே உயிர் ஓட்டத்தில் மாற்றமோ தடையோ ஏற்பட்டால் உடலில் வலி நோய் என்பன ஏற்படும் உறுப்புக்கள் பாதிக்கப்படும் மின்சாரம் செல்லும் கம்பியை சுற்றி காந்தம் உருவாவதை போலவே மனித உடலை சுற்றி காந்த அடர்த்தி இருக்கும் இந்த ஜீவகாந்த அடர்த்தி ஒருவனின் அறிவாட்சித் திறனோடு தொடர்பு கொண்டது என்பதை தற்கால மருத்துவம் மனோவியல் மற்றும் தத்துவ முறைகள் நிரூபித்துள்ளன.
ஒரு மனிதனின் உடல் மன ஆற்றல்களை மேம்படுத்தி அழகியல் பழக்கம் வாழ்வியல் தத்துவங்களை ஒத்துப் போவதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதனிற்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளான மற்றவர்களிடம், அன்பாகவும் நன்றியுணர்வுடன் பழகுதல், தனது தவறுகளை திருத்திச் செயல்படும் மனத்திறன், சூழ்நிலைகளைக் கட்டுப்பாடுடனும் சுய ஒழுக்கத்துடனும் கையாளுதல், நல்லெண்ணத்துடன் கூடிய நேர்மை குணம், புதிய சவால்களை எதிர்கொள்ளும் துணிவு இவை அனைத்தும் ஆன்மீகம் கற்றுக் கொடுக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை
“மதங்களும், கலைகளும், விஞ்ஞானமும் ஒரு மரத்தின் பல்வேறு கிளைகள்” என்று நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகின்றார். பரிமாண வளர்ச்சி தத்துவத்தை மொழிந்த சார்லஸ் டார்வின் “மனித குலமும் இந்த பிரபஞ்சமும் இறைவன் இருப்பதற்கான மிகப்பெரிய அத்தாட்சி” என்கின்றார். இன்றைய தொலை தொடர்பு தொழில் நுட்பத்தின் தந்தையான விஞ்ஞானி மார்க்கோனி “இறை உணர்வுடன் ஜெபத்தின் சக்தியில் அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்குண்டு, நான் ஒரு கத்தோலிக்கன் என்பதனால் மட்டுமல்ல நான் ஒரு விஞ்ஞானி என்பதனாலும் இறை நம்பிக்கை உடையவனாக இருக்கிறேன்.” என்கிறார் மார்க்கோனி.
ஆன்மீகமும் இறை நம்பிக்கையும் அறிவியலுக்கு ஏற்புடையது அல்ல
என்பது போன்ற வாதத்தை சிலர் வைக்கின்றார்கள். அது தவறானது, தன்னம்பிக்கையை
ஆன்மீகம் வளர்கின்றது. தோல்வியை கண்டு துவளாத மன நிலையை
ஏற்படுத்துகின்றது.
உடல் உள மன ஆற்றல்களை மேம்படுத்தும் வழிமுறைகள் பகவத்கீதையில் காட்டப்பட்டுள்ளது சிறந்ததொரு அறிவியல் நூலாக திருமந்திரம் காணப்படுகின்றது. பல அறிவியல் விடயங்கள் அதில் காட்டப்பட்டுள்ளது. பொதுமறையாம் திருக்குறளில் வாழ்வியல் அறிவுரைகள் அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது. இவை மட்டுமல்ல, ஆராய்ந்து பார்த்தோம் என்றால் ஆன்மீக நூல்கள் என நாம் விலக்கி வைக்கும் பல நூல்களில் அறிவியல் மிகுந்து இருப்பதும் நோயைத் தீர்த்து வைப்பதற்கும், தணித்து வைப்பதற்கும், உருவாகாமல் இருப்பதற்குமாகவும் உணவே மருந்து எனவும் இங்கே அதிகமாக பொக்கிஷங்கள் அறிவுடன் விளக்கப்பட்டுள்ளன.
இவற்றை மத வேறுபாடின்றி புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகின்றது.
உங்களுக்கு
மரணிக்க ஆசையா என்று கேட்டால், ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து ஒரே வார்த்தை
ஒலிக்கும், “இல்லை எனக்கு மரணிக்க ஆசை இல்லை இல்லை”. இதோ மரணிக்க ஆசை
இல்லாதோர் மட்டும் தொடர்ந்து வாசியுங்கள். மரணம் என்பது ஒருவகையான உடலின்
ஊனம். அல்லது உடலின் பசி என்று சொல்லலாம். உடல் எப்போதும் ஏதோ ஒன்றை
எதிர்பார்த்தவண்ணமே உள்ளது. புரியும் படி சொல்லவேண்டும் என்றால். ஒவ்வொரு
நாளும் உங்களுக்கு தாகம் ஏற்படுகின்றது, பசிக்கின்றது, கழிவகற்ற வேண்டும்
என்ற எண்ணம் தோன்றுகின்றது. இதெல்லாம் அத்தியாவசிய செயற்பாடு என்று மனிதன்
வகைப்படுத்தியுள்ளான்.
இப்படி
அத்தியாவசிய செயற்பாடுகளைச் செய்யாமல் விட்டால், இதற்குப் பதில் உடல்
மரணத்தை நாடும். ஆகவே உடல் ஒன்றை எதிர்பார்க்கின்றது அதைக்
கொடுக்காவிட்டால் அதற்குப் பதில் மரணத்தை எதிர்பார்க்கின்றது. இதுதான்
இலகுவான புரிந்துகொள்ளுதல். அப்படி என்றால் உடல் எதிர்பார்க்கும் உணவைக்
கொடுத்தால் எமக்கு மரணம் வராமல் அல்லவா இருக்க வேண்டும்? அப்படி
இருக்கையில் தினமும் மூன்றுவேளை உணவுண்ணும் பக்கத்துவீட்டு அண்ணனும் 35
வயதில் அல்பாயுளில் மரணமடைந்த செய்தி தான் என்னை மீண்டும் சிந்திக்க
வைத்தது.
அது எப்படி
மரணம் என்ற ஒன்று நிகழலாம்? உடலிற்குத் தேவையான ஒன்றைக் கொடுக்கும் போதும்
உடல் மரணத்தை நாடும் என்றால் அதில் நியாயம் இல்லையே என்ற யோசனையுடன் நடந்து
சென்று கொண்டிருந்த நான் தெருவில் கண்ட ஒரு காட்சி என்னை
தெளிவுபடுத்தியது. அதிக எடையோடு தெருவில் சென்ற ஒரு வண்டி கவிழ்ந்து
விழுந்து கிடந்தது, அதை பார்த்த அங்கே அதிக எடையோடு வந்த இன்னுமோர் வண்டி,
அந்த இடத்திலேயே நின்று அதன் எடையை இன்னுமோர் வண்டியில் இறக்கி வைத்துக்
கொண்டிருந்தது. இப்போது எனக்குத் தெளிவு பிறந்தது.
உணவு
என்பதால் மரணம் தடைப்படுவது கிடையாது, மரணம் தள்ளிப் போடப் படுகின்றது.
மரணம் தடைப்பட வேண்டும் என்றால் மருந்து உண்ணவேண்டும். மருந்து என்றால்
என்ன? உணவு என்றால் என்ன?
விருந்து
சமைத்து உண்டால் அது உணவு. வீரியம் உள்ளதை அறிந்து அரைத்து உண்டால் அது
மருந்து. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், உடல் ஏன்
கழிவகற்றுகின்றது? போதுமான உணவைக் கொடுத்தால் எதற்காக உடல் மிகுதியென்று
கழிவக்கற்ற வேண்டும்? அதற்க்கு ஒரே காரணம் நாம் தேவைக்கு அதிகமாக வயிற்றை
நிரப்பி வைக்கின்றோம் அதனால் உடல் உழைத்துக் களைத்து உயிரை இழக்கின்றது.
நாம் உண்ணும் உணவு சிகப்பு இரத்தமாகவும் வெள்ளை இரத்தமாகவும் உடல் முழுதும்
சென்று எம்மை இயக்கிக் கொண்டு உள்ளது. சிகப்பு இரத்தம் என்னை உற்சாகமாக
வைத்திருக்கவும், வெள்ளை இரத்தம் எம் உடலில் உள்ள தீய கிருமிகளை அழிக்கவும்
பயன் படுகின்றது. இந்த இரண்டையும் சீர்படுத்தும் அளவு மருந்து உண்டாலே
போதும். உடல் மலம் கழிப்பதை நிறுத்திவிடும். இதனால்த் தான் சித்தர்கள்,
தியானத்தில் அதிக காலம் அப்படியே அமர்ந்த நிலையில் இருந்திருக்கின்றார்கள்.
இப்போது
ஒரு சந்தேகம் வந்திருக்கும் அது எப்படி மருந்துணவைக் கண்டு பிடிப்பது
அதில் எப்படி உட்கொள்ளும் அளவைக் கண்டு பிடிப்பது என்று சந்தேகம் வரும்.
அதற்கு நீங்கள் முதலில் தமிழ் படிக்க வேண்டும், தமிழில் உள்ள பழைய
நூல்களைத் தேடிக் கற்க வேண்டும். இந்த கட்டுரையின் முடிவில் இப்போது
உங்களுக்கு ஒரு சில காயகல்ப உணவுகைக் குறிப்பிடுகின்றேன் அதை உட்கொள்ளும்
முறையையும் சொல்லுகின்றேன், செய்து பாருங்கள். அறுகம்புல்லு, துளசி,
முருங்கையில்லை, நெல்லிக்காய்.
மேலே
சொன்ன உணவுப் பொருட்களை தாவரத்தில் இருந்து பறிக்கும் போதே மந்திரங்கள்
சொல்லி அல்லது தேவாரங்கள் பாடிப் பறிக்க வேண்டும். அதற்கு காரணம்
தாவரத்தில் இருந்து பறிக்கும் போது, தாவரம் அதன் வலியை விஷமாகக்
கக்கிவிடாமல் இருக்க மந்திர ஒலிகளை எழுப்பவேண்டும். அதன் பின் பறிக்கப்பட்ட
தாவர பகுதிகளை சூரிய நிழலில் காயவைக்கவேண்டும். முக்கிய கவனம் சூரிய
ஒளியில் இல்லை, சூரிய நிழலில். அதாவது பகல் வேளையில் ஒரு குடை அல்லது
தாள்வாரத்தின் நிழலில் காயவைக்கவேண்டும். காய்ந்து தொட்டால் உதிரும்
பக்குவத்தில் அதை எடுத்து நன்றாக சாம்பலாகும் வண்ணம் அரைத்துக்
கொள்ளவேண்டும். அரைத்த துகள்களை உள்ளங்கையில் எடுத்து தேன்குளைத்து
அருந்தினால் அது வாய் முதல் வயிறுவரை சென்று வேகமாக குருதியில்க் கலந்து,
உடலிற்கு மருந்து வழங்கும். இதன் மூலம் உடல் அதிக சக்தியையும், குறைந்த
வேலையையும் பெறும். இதோடு உங்கள் ஆத்மாவையும் ஒன்றிக்க வைத்தால், மரணமின்றி
மகிழ்ந்து வாழலாம்.
தமிழில்
ஆங்கிலம் கலந்தால் உடனடியாகத் தெரிகின்றது. ஆனால் தமிழனுக்கே தெரியாமல்
தமிழில் பல மொழிகள் கலந்துள்ளன. இதையெல்லாம் யார் தட்டிக் கேட்ப்பார்கள்?
இன்று நாம் தமிழ் என்ற கோணத்தில் பாவிக்கும் பாதிக்கு மேற்பட்ட வார்த்தைகள்
தமிழே அல்ல, என்று சொன்னால் நம்பமுடிகின்றதா? நம்பா விட்டாலும்
நறுக்கென்று குத்தும் உண்மை இது தான்.
பாளி
மொழி, சமஸ்கிருதம், லத்தின், அரபு என்று மட்டும் இல்லாது போர்த்துக்கேய,
ஒல்லாந்த, டச்சுமொழிகள் கூட கலந்து கிடைக்கும் எம் மொழியின் தற்கால நிலை,
கவலைக்குரிய கலிகால நிலையாகும். ஒரு மொழியானது காலத்தின் அடிப்படையில்
பல்வேறு இணைப்புக்களிலும் பணிப்புக்களிலும் கலந்து புதிய மொழியாகத்
திரிவடையும் ஆபத்து நிலையில், தமிழ் மொழி மட்டுமே 3000 ஆண்டுகளுக்கு முன்
எழுதப்பட்ட வார்த்தைகளைக் கூட இன்றும் வாசித்து புரிந்து கொள்ளக் கூடிய
அதிசய மொழியாக காணப்படுகின்றது. அதற்கு கண்கூடு உதாரணமே எங்கள்
திருக்குறள்.
திருக்குறளின்
வார்த்தைகளையும் வசன நடையையும் வாசிக்கும் தூய தமிழனுக்கு கண்டிப்பாக அதன்
கருத்துக்கள் மனக்கண்ணில் விழுந்துவிடும். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” இது மூவாயிரம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட வார்த்தைகள்
ஆனால் இவ்வார்த்தைகள் இன்றும் பாவனையில் உண்டு. இப்படிப்பட்ட சிறப்பு பல
மொழிகளில் இல்லை. இதற்கெல்லாம் ஒரே காரணம் தமிழனின் புத்திசாலித்தனம் என்று
சொன்னால் நம்ப முடியுமா? இதோ ஆதாரங்களுடன் அடுத்த எடுத்துக்காட்டலைக்
கவனியுங்கள்.
தமிழ்
மொழி பலமுறை அழிவு வரை சென்று மீண்டும் உயிர்த்து வந்த மொழியாகக்
காணப்படுகின்றது. அதற்கு நாயன்மார்களின் கதை முதல் நாடோடிக் கதைகள் வரை பல
ஆதாரங்கள் உண்டு. உலகில் பல இனத்தவர்களால் தமிழ் இனத்தவர்கள் மீது பலமுறை
தாக்குதல்கள் நடத்தப்பட்டு இறுதியில் இயற்கையே அழித்த ஒரு இனமாக, இன்றும்
தெற்கே இந்துசமுத்திரத்துள் உறங்கி கிடைக்கும் தமிழனின் சரித்திரமும் ஒரு
சாட்சி.
இப்படி
தலைசிறந்த மொழியாக இருந்த தமிழ் மொழி ஒரு காலத்திலும் எந்த மொழியையும்
எதிர்க்கவில்லை. ஏன் என்றால் அனைத்து மொழி மக்களும் தமிழ் மொழி கற்க
ஆசைப்பட்டனர். தமிழ் கற்று தமிழனானால், தலைசிறந்த வாழ்க்கை கிடைக்கும்
என்று அனைவரும் தேடித் தேடி தமிழ் கற்றனர் எப்படி இன்று அனைவரும் ஆங்கிலம்
கற்கின்றோமோ அதே போல அன்று அனைவரும் தமிழ் கற்றனர். இதற்கு உதாரணம் வேற்று
மொழிக்காரர்கள் தமிழ் கற்று, தமிழ் அரச சபையில் மந்திரியாகவும்
அமைச்சராகவும் வீற்றிருந்தனர். என்பதற்கு அன்று முதல் இன்று திரு.கருணாநிதி
வரை பல சாட்சிகள் உள்ளனர். அப்படிபட்ட எவரையும் எதிர்க்காத தனிக்காட்டு
ராஜாவாக இருந்த தமிழர்கள் இன்று பிறமொழிகளை எதிர்க்கும் நிலை ஏற்பட்டு
விட்டதா! என்ற ஆச்சரியத்தில் ஆரம்பித்த என் தேடல் ஒரு அற்புதத்தைக் கண்டு
பிடித்தது. இதோ அந்த அற்புதம் உங்களுக்காக.
ஆரியரின்
படையெடுப்பின் பின் அவர்கள் முதலாவதாகக் கைவைத்த இடம் கோவில்கள்.
கோவில்களில் உட்செல்ல மறுப்பு விடுத்து சாதி பிரிவு ஆரம்பமானது. அரச
சபையைக் கூட ஆக்கிரமிக்காத ஆரியர்கள் ஏன் கோவில்களை ஆட்கொண்டனர் என்ற
பெரும் கேள்வி எனக்குள் எழுந்த போது தான் ஒரு பொறி தட்டியது. ஆரிய
மொழிகளில் அதிக சமஸ்கிருதக் கலப்புக்கள் உண்டு. அதே நேரம் அவர்களின்
பொருளாதாரமும் அறிவாற்றலும் அதிகரித்தும் உள்ளது. ஆனால் சமஸ்கிருதமோ தமிழ்
மொழியின் சிறப்பையும் தமிழிச் சொல்லப்பட்ட கலைகளின் சிறப்பையும்
பறைசாற்றிக்கொண்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என்று உற்றுப் பார்க்கும்
பொது ஒரு பெரும் உண்மை என்னை விழிக்கச் செய்தது.
தமிழனின்
பாதுகாப்பு உணர்வு எப்படிப்பட்டது என்ற ஆச்சரியத்தை இப்போது உங்களுக்கு
விளக்கவுள்ளேன். பிறமொழிக்காரர்கள் தமிழைக் கற்று, தமக்குள் புகுந்து
கொள்வதை உணர்ந்த தமிழர்கள் தமெக்கென ஒரு ரகசிய மொழியை உருவாக்கினார்கள்.
அந்த மொழியைப் பாதுகாக்க அதன் ஓசை வடிவங்களை செதுக்கினார்கள். அம்மொழியை
பேசுவோர் அனைவரும் ஒரே சந்தத்தில் பேசும்வண்ணம் மந்திரக் கட்டுக்களாக
செதுக்கினார்கள். அந்த மொழிக்குள் தமிழனின் மருத்துவம் விஞ்ஞானம்
பொருளாதாரம் என்று அனைத்து ரகசியங்களையும் ஓசைக்கு கட்டாக மாற்றி மறைத்து
வைத்தார்கள்.
அதனால்த்
தான் கோவில்களில் பல இடங்களில் ரகசிய அறைகளும் அந்த அறைகளுள் பொன் பொருள்
என்பதோடு சேர்த்து ஒரு சில ஓலைச் சுவடிகளும் காணப்பட்டன. ஒற்றர்கள் மூலம்
இவற்றை அறிந்த ஆரியர்கள், தமிழை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தை
கோவில்களுக்குள் புகுந்து கற்றுக் கொள்ளத் தொடங்கினர். இவற்றை நம்பக்
கஷ்டமாக உள்ளது என்றால் சமஸ்கிரதம் எப்படி எழுதப் படுகின்றது என்று மட்டும்
எடுத்துக் பாருங்கள். சமஸ்கிரத எழுத்துக்களையும் தமிழ் அகர வரிசையையும்
சேர்த்து வைத்துப் பாருங்கள், அதன் பின் நீங்களே முடிவெடுக்கலாம்,
சமஸ்கிரதம் எப்படி உருவாகி உள்ளது என்று. அது மட்டுமின்றி இதோ வந்து
சென்றதே பொங்கல் சிறப்புத் தினம் அதற்கு ஒரு நாள் முதல்
இந்தியர்கள் அனைவரும் போஹி என்று ஒன்று கொண்டாடுகின்றார்கள், இந்தப்
பண்டிகை இலங்கையில் கொண்டாடுவது இல்லை, ஏன்? அது எதற்காகத் தெரியுமா?
எங்கள் வீடுகளிலும் ஏதேனும் சமஸ்கிருத புத்தங்களையோ, ஓலைச் சுவடிளையோ
வைத்திருந்தால், அதை அழித்துவிட வேண்டும் என்பதற்க்காக ஆரியர்கள் மேற்கொண்ட
சூட்சி தான் இந்த போஹி.
இனிமேல்
நாம் செய்யவேண்டிய ஒரே ஒரு வேலை எம் முன்னோர்கள் எமக்கென்று சேர்த்து
வைத்த அறிவுப் பொக்கிஷத்தை தெடிக் கற்றுக் கொள்வோம். எம் முன்னோர்கள்
சொன்னதெல்லாம் மூட நம்பிக்கை செய்ததெல்லாம் முட்டாள்த் தானம் என்று யாரோ
ஒருவர் சொல்வதை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளாமல், சற்று நீங்களும் யோசித்துப்
பாருங்கள் வான்மீகி ராமாயணத்திற்கும் கம்ப ராமாயணத்திற்கும் என்ன
வித்தியாசம் என்று? சிந்தியுங்கள். சமஸ்கிருதம் எழுதிய தமிழனிற்கும் தமிழ்
எழுதிய ஆரியருக்கும் என்ன வித்தியாசம் என்பதை அதில் புரிந்துகொள்வீர்கள்.
வா புதிதாய்ச் சிந்திப்போம், ஓர் புதிரைச் சந்திப்போம். ஏன் பிறரை நிந்திப்போம்? நாம் உயர விண்விற்போம்.