மூளையின் வேலை பற்றி மூளையின் ஒரு மூலையில்

மனிதனின் உடல் உறுப்புக்களில், மிகவும் அதிசயமான உறுப்பு மூளை. மூலையைப் பற்றி நாம் ஆய்வு செய்யும் பொது, மூலையைத் தான் பயன்படுத்தவேண்டி உள்ளது, என்பது ருசிகரமான தகவல் ஆகும்.

The young and conceptual image of a large stone in the shape of the human brain

இதயம் அதி முக்கியமான உறுப்பு என்பது வெளிப்படையான உண்மை. அதேபோல் மூளையும் ஒரு முக்கியமான உறுப்பு. மனிதனின் நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல், நடவடிக்கை என எல்லாவற்றையும் முறையாக ஒழுங்கமைப்பது மூளை தான்.

ஆண் மூளையில் மூன்று மையங்கள் உள்ளன. ஆனால் அது வேறு விதமாக செயல்படுகின்றது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதைப் போல ஆணால் விவரித்து கொஞ்சம் இழுத்து இழுத்து வழவழவென கூற முடியாது.

ஆண் பெண் இருவருக்கும் உடலமைப்பில் மட்டுமல்ல மனம், மூளை அமைப்பு வித்தியாசமாகத்தான் உள்ளது. இப்படியாக மூளை வித்தியாசப்படுவதனால் தான் ஆணை பெண்ணாலும், பெண்ணை ஆணாலும் முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. மின்சாரம் கூட இந்த மூளையில் உற்பத்தியாகுகின்றது, என்னும் உண்மையை தெரிந்தால் ஷாக் ஆகி விடுவீர்கள்.

மனித மூளையின் நிறையில் 60% கொழுப்பால் ஆனது மூளைக்கு. வலி தெரியாது வலியை உணரும் வலிவாங்கிகள் அங்கு இல்லை மண்டை ஓட்டிற்குள் மூளை நகரும் போது அங்கு வலி உணரப்படுவதில்லை. மனிதன் விழித்திருக்கும் போதே மூளையில் அறுவை சிகிச்சை செய்ய முடியும். ஏனெனில் இங்கு வலி வாங்கிகள் இல்லாமல் இருப்பதினால் தான் இது சாத்தியமாக உள்ளது. மனிதனை மயக்க நிலையில் வைத்து மூளையில் அறுவை சிகிச்சை செய்வதில்லை. ஏனெனில் மனிதன் உணர்வுடன் இருக்கும் போது தான் மருத்துவர்களால் மூளையின் செயற்பாடுகளை அறிந்து கொண்டு திறம்பட செயற்பட முடியும். மூளையானது 25 வாட்ஸ் அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியது. ஒரு மின் விளக்கை எரியவைக்கும் அளவிற்கு மின்சாரத்தை மூளையால் உற்பத்தி செய்ய முடியும். எந்த விஷயமானாலும் மூளை சரியாக பார்க்கக் கூடியது. கண்கள் தலைகீழாகப் பதியும் பிம்பத்தை மூளை சீராக்கி எமக்கு தருகின்றது. மூளையின் அறிவிற்கும், அளவிற்கு சம்பந்தமே இல்லை. மூளை பெரிதாக இருந்தால் அறிவு அதிகமாக இருக்கும் என நினைப்பது தவறானது. மூளையில் உள்ள நரம்பு இழைகளின் நீளம் ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் கிலோ மீட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நரம்பு இழைகள் உந்து விசைகளை நமது உடலில் அனைத்து பாகங்களிலும் உள்ள அணுக்களுக்கு அனுப்ப உதவும்.

20 வயது நெருங்கும் பொழுது உடல் உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்ற போதும், மூளையின் வளர்ச்சி 40 வயது வரை வளர்ந்து கொண்டே இருக்கும். புதுப்புது விடயங்களை கற்றுக் கொள்ள முனையும் பொழுது மூளை அதை எந்நேரமும் ஏற்றுக் கொள்ளும்.

மூளையானது வெண்ணை போன்று கொழ கொழப்பான தன்மையுடன் இருக்கும் மனிதன் ஒரு நாளில் 70 ஆயிரத்திற்கு அதிகமான விஷயங்களை சிந்திக்கின்றான். ஒரே நேரத்தில் இரண்டு விடயங்களை மனிதனால் சிந்திக்க முடியும். தகவலானது மூளைக்குள் மணிக்கு 418 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் என கண்டறிந்துள்ளனர். மூளைக்கு ஓய்வில்லாமல் செயல்படும். மனிதன் உறங்கும் போது கூட, விழித்திருக்கும் போது செயல்படுவதை விட கூடுதலாக செயற்படும். மனித உடலின் நிறையில் இரண்டு சதவீத அளவிற்கு மூளை இருக்கும், ஆனால் மொத்த சக்தியின் 25% சக்தியை அது பயன்படுத்துகின்றது.

மூளையின் பாதி அளவு இருந்தாலும் கூட உயிர் வாழ முடியும். மூளையின் ஒரு பகுதி பழுதடைந்து விட்டாலும், செயல்படும் மறு பகுதி பழுதடைந்த பகுதி செய்தவற்றைக் கற்றுக்கொண்டு செயல்பட முடியும். மூளையின் செயல்பாடு வினாடிக்கு ஒரு லட்சம் ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகின்றது. பொருட்களை பற்றி சிந்தித்துக்கொண்டு பொருட்களை நினைவுப்படுத்திக் கொண்டு கம்ப்யூட்டரில் டைப் செய்யவும் முடியும். மூளையில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை இரண்டு வயதில் இருந்த அளவில் முடிவி வரைக்கும் இருக்கும். சிலவேளை குறையலாம் ஆனால் அது கூடாது. கற்ப காலத்தில் பெண்ணின் மூளை வித்தியாசமாக இருக்கும். குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் பின் தான் இயல்பு நிலைக்கு அடையும். ஒரு மனிதனின் வாழ்நாளில் மூளையானது ஆயிரம் லட்சம் கோடி துணுக்குகளை சேமிக்கும் அதாவது. குவாட் ட்ரில்லியன் இது ஒன்றுக்கு பின் 15 சைபர். மூளையின் உருவம் வளர்வதில்லை. குழந்தை பிறக்கும் போது இருந்த அளவு தான் முடிவு வரைக்கும். இதனால் தான் பிறந்த குழந்தையின் தலை உடலைவிட பெரிதாக இருக்கும்.

இந்த மூளையின் தகவலை உங்கள் மூளைக்கு வழங்கிய எந்தன் முயற்சி பிடித்திருந்தால், உங்கள் கருத்தை எனக்கு எழுதி அனுப்புங்கள். நன்றி.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *