Stress ஏன் எப்படி எதனால் வருகின்றது? – My Bigg Boss_Solomate – Day 03

வாழ்க்கையில எல்லோருக்கும் இருக்கின்ற பெரிய பிரச்சினை மனா அழுத்தம். அதிலும் இப்போது கொரோன காலத்தில பலரும் வீட்டிலேயே இருப்பதால், அதீத பிரச்சினையாகிவிட்டது. ஏன் இன்று மனா அழுத்தம் பற்றிக் கதைக்கின்றேன் என்றால்? நேற்றைய தினம் ஒரு மோசமான தினமாக அமைந்தது என்னுடைய எல்லா புள்ளிகையும் இழந்துவிட்டேன். மற்றும் என்னுடைய நண்பர் சந்தித்தேன் அவரின், அவரின் மனா அழுத்தத்தைக் கேட்டேன். அதனால்த் தான் இன்று மனா அழுத்ததை பற்றி முழுமையாகப் பார்ப்போம் வாருங்கள் முதில் இருந்து ஆரம்பிப்போம்.

இன்று காலை 6:30 க்கு எழுந்து ஜாகிங் போனேன் இன்று சற்று மெதுவாக உடல் முழுவது நோக ஆரம்பித்தது. இன்றைய நாள் முழுவது இரவு நித்திரைக்குப் போகும் வரை அந்த வலி இருந்தது. ஜாகிங் முடிய சாப்பிட்டு, எழுத்தாளர் சங்க புத்தக வெளியீட்டிற்கான Notice தயார் செய்து 10:30க்கு Dortmund வெளிக்கிட்டேன். 12:30 க்கு Meeting ஒரு மணித்தியாலம் முதல் சென்றால் பார்க்கிங் இடத்தில் வீடியோ செய்யலாம் என்று சென்று எல்லாம் வெற்றி ஆனால் அதன் பின் தான் அந்த தினத்தின் முக்கிய கடினம் ஆரம்பமானது.

வேலை செய்யும் இடத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன், அவர் மிகவும் சோகமாக இருந்தார், காரணம் அவருடைய Team அவரை ஏமாற்றி வேறு கொம்பனியில் சென்று சேர்ந்துவிட்டது. அதனால் மிகுந்த சோகத்தில் இருந்தார் அவரைக்கு கூடிக் கொண்டு கீழே கடைக்குச் சென்றேன் ஒரு சின்ன மாற்றமாக இருக்கும் என்று. ஆனால் தொருவில் நடந்து செல்லும் போது அவரின் பழைய Team உறுப்பினர்கள் இன்னும் 4 புதிய உறுப்பினர்களுடன் எதிரிலேயே கண்டும் காணாததை போல நடந்து செல்ல, அந்த நண்பர் உடைந்து போனார், சோகத்தில் மனா அழுத்தத்தில் இருந்தார். அதனால் நான் மனா அழுத்ததை பற்றி கொஞ்சம் தெடிக் கற்றுக் கொண்டேன். மனம் என்றால் என்ன? மனா அழுத்தம் எதனால் ஏற்படுகின்றது வாருங்கள் விரிவாக்கப் பார்ப்போம்.

மனம் என்பது மிக இலகுவான விடையம் பலருக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை நான் சொல்லுகின்றேன் நீங்கள் ஒருமுறை கவனமாகப் பாருங்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
எம்முடைய உடலில் உறுப்புக்கள் உள்ளன அதை இயக்குவது மூளை. மூளை ஒரு கடடலையை கொடுக்கும் அதன் படி செயல்படும் உறுப்பின் விளைவு என்ன என்பதை மூளை சேமித்து வைக்கும். உதாரணத்திற்கு சிறுவர்களாக இருக்கும் போது நாம எல்லோரும் ஓடி ஓடி நடப்போம் கீழே விழுவோம் எழுந்திக்கொள்வோம் ஆகவே காயம் வரும் வலி வரும் இதெல்லாம் மூளை சேமித்து வைக்கும் இடம் தான் மனது. ஒரு குறிப்பிடட காலத்தின் பின் மூளை சுயமாகச் சிந்திப்பதை குறைத்துக்கொண்டு வரும். மனது தான் வேலைசெய்யும். ஏன் என்றால் மூளை வேலை செய்தால் அது கடடளைகளைக் கொடுக்கும் அதன் பின் அதன் விளைவை சேமிக்கும், சேமித்து வரும் விடையை வைத்து எது நல்லம் எது கூடாது என்று பிரித்துப் பார்க்கும்.இது ஒரு பெரிய கடினமான வேலை ஆகவே அதை இலக்கு படுத்த ஏற்கனவே உள்ள அனுபவத்தை வைத்து மனது தான் முடிவுகளை எடுக்கும் சிந்திக்காமல் கட்டளைகளை இடும். உடல் இயங்கும். இதற்க்கு ஆதாரம் நீங்கள் வாகனம் ஓடும் போது ஆரம்பத்தில், எது எங்கே இருக்கு எப்படி ஓடணுமெப்படிப் பார்க்கோணுமென்று ஜோசிச்சு ஜோசிச்சு செய்வீர்கள் ஆனால் ஒரு குறிப்பிடட காலத்தில் எல்லாம் தன்பாட்டில் நடக்கும் எதையும் சிந்திக்க மாடதீர்கள். அதுதான் மனது செய்யும் வேலை. இப்போது மனா அழுத்தம் எப்படி வரும் என்றால். மனதில் பல விடையங்களை சேர்த்துவைத்து ஒரே நேரத்தில் அனைத்தையும் செய்யச் சொன்னால். மனது வேகவேகமாக கடடளைகளை உடலிற்கு அனுப்பும். அப்போது மூளை சோம்பலாக உள்ள மூளை மீண்டு சிந்திக்க ஆரம்பிக்கும். அது ஒவ்வுறு செயலையும் செய்யாதே செய்யாதே என்று கட்டுப் படுத்து. காரணம் மூளைக்கு ஒரு செயலின் பயன் கிடைத்தால்த் தான் அடுத்தத்தைச் செய்யும். அந்த வேளை, உடல் அங்கங்கள், நடுக்கத்தை காணும், வாய் குளறும், உடல் முழுமையாக இயங்காமல்க் கூடப் போகலாம்.

இதைத் தான் மனா அழுத்தம் என்று சொல்வார்கள். இப்போது இந்த மனா அழுத்தத்தை எப்படி சரிசெய்யலாம் என்றால், பல வழிகள் உண்டு, இலகுவாங்கத்து விரைவான சில வழிமுறைகளைத் தருகின்றேன், பாருங்கள். முதலில் கதைக்கணும், யாரோடாவது கதைக்கலாம், அல்லது தனியாக உங்களோடு நீங்கள் வாய்விட்டு கதைக்கலாம். என் என்றால் கதைக்கும் பொது மூச்சு சீராகும், வாய் இயங்கும் தோல் இயங்கும் காத்து கேக்கும், கண் தசைகள் இயங்கும், இதனால் உடல் மீண்டும் சமநிலைக்கு திரும்புகின்றது. அல்லது சத்தமாக சிரிக்கலாம், சிரித்தால் இப்பொது அதே செயல் நடைபெரும். இது தான் உடனடியாக மனா அழுத்தத்திக் குறைக்கும் வழிமுறை.

அதன் பின் தமிழ் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, வானம் படத்தின் டப்பிங் செய்யச் சென்றான் என்னுடைய மனம் ஒருநிலையிலேயே இல்லை, என்னுடைய வேலை, நேர பற்றாக்குறை, நானும் தனியாகத் தான் வேலை செய்கின்றேன், எனக்கு நல்ல Team வேண்டும் ஆனால் நல்ல மனிதர்களை எப்படி Team இல் இணைப்பது என்று மனது அலை பாய்ந்துகொண்டே இருந்தது. அப்படியே ஒரு 19:35 போல டப்பிங்கை முடித்து வீடிற்கு 20:45 சென்றடைந்தேன். அதன் பின் தான் வீடியோ எடிட்டிங்கே செய்தேன் 23:40 வரை YouTube விடியோவுடன் இருதேன் ஒரு கட்டிடத்தில் வீடியோ செய்வதை விட்டுவிடுவோம் என்று தோணியது, அதனால் இன்று எனக்கு 00 புள்ளிகள். நான் இன்றைய நாளைப் பெரிய தோல்வி நாளாகப் பார்க்கின்றேன். நான் துவண்டு போகவில்லை, மீண்டும் ஆரம்பிப்பேன் என்ற நம்பிக்கையில் நித்திரைக்குச் சென்றேன்.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *