தளர்விலும் வாழ்வெழுது ஆளுமைகள்

அளவில்லா அன்புடன் அனைவரும் சுற்றி நின்று பார்க்க,
ஆசைகள் இருந்தும் அசைந்து படுக்க முடியா உடல்.
இளகிய முள்ளந்தண்டு எடுத்து வைக்க இயலாக் கால்கள்,
ஈ மொய்த்தால் கூட எதுவும் செய்யாக் கை.
உள்ளம் உலகை சுற்ற ஏங்கும், உற்றுப்பார்த்தால்
ஊன் உடம்பாய் நான்கு சுவருள்ளடக்கம்.
என் நிலமை அறிய முடியா மயக்கம்,
ஏன் என்று கேட்க என் நாவும் தடக்கும்
ஐயம் ஒன்றே மிச்சம், அகிலம் மீது நான் இப்போ புதிய எச்சம்!
ஒவ்வொரு நாளும் எழுந்து நிற்க முனைப்பேன்,
ஓங்கி ஒலிக்கும் வாழ்வை எழுத நினைத்பேன் – நான்
ஔவையல்ல ஆறுமாதக் குழந்தை(யென்) தளர்விலும்
ஃதே வாழ்வெழுதும் என் ஆளுமையே ஆரம்பம்.

சிந்தனை சிவவினோபன்,

0 thoughts on “தளர்விலும் வாழ்வெழுது ஆளுமைகள்”

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *